பா.ஜ.,வை ஒரு கை பார்க்க தயார்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: ''தமிழகத்தில் பல முனை போட்டிகள் இருக்கலாம். ஆனால், அது பலம் பொருந்திய போட்டியாக இல்லை,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும், 11.19 சதவீதம் என்ற வளர்ச்சியை சாதிக்க முடிய வில்லை. ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பா.ஜ., அரசு மத்தியில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்த அளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் அணுகுகின்றனர் என்று, நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்திருப்பது போன்ற திட்டங்களை, வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கின்றனரா? தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்களில் ஒருவராவது தி.மு.க., அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார். அதனால் தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் உள்ளனர். தமிழகத்தின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும், பா.ஜ.,வை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. அவர்களின் சதி அரசியல் வெளிப்பட்டு, அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றனர். மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி ஆட்சிகளை கவிழ்த்து, தங்களின் அரசை கொண்டு வர பயன்படுத்திய வாஷிங் மெஷினை, பா.ஜ.,வினர் இங்கும் கொண்டு வந்து, கூட்டணி அமைத்து உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது, முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், 'ரெய்டு'களுக்கு ஆளாகினர். கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் மீது எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்ய விடாமல், கவர்னர் வாயிலாக நீண்ட காலமாக நிறுத்தி வைத்து உள்ளனர். இந்த லட்சணத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., வாயிலாக எங்களை மிரட்டலாமா என்று பார்க்கின்றனர். பா.ஜ., தன் படை பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம். மக்கள் பா.ஜ.,வை நம்ப வேண்டும் என்பதற்காக, பழனிசாமி போன்றவர்களை கிளை செயலர்களாக வைத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கின்றனர். தமிழகத்தில் நடக்க இருப்பது ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்திற்கு அடிக்கடி வர வேண்டும். கவர்னரையும் மாற்றக் கூடாது. அதுவே, மக்கள் மத்தியில் எங்களுக்கு பெரிய பலம். 'இண்டி' கூட்டணி தலைவராக நான் வர வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். என் உயரம் எனக்கு தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm