வெற்றி பெற்ற பிறகு அதிகார பகிர்வை வாதிடலாம்
பா.ஜ., பிடிக்குள் அ.தி.மு.க., போய் விட்டது. தமிழகத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும். திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை , முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணிச்சலாக செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க., தலைவர்கள் கவனமாக, எச்சரிக்கையாக செயல்படாவிட்டால், சுய அடையாளத்தை அவர்கள் இழக்க நேரும். தி.மு.க., அமைத்துள்ள குழுவுடன் பேச்சு நடத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடரும். 'அதிகார பகிர்வு வாயிலாகவே கட்சி வளர்ச்சி அடையும்; அதனால் தான், அதை, உயர்த்தி பிடிக்கிறோம் என்பது இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்ததாக இல்லை. வெற்றி பெற்ற பிறகு அதிகார பகிர்வை கூறி, வாதிடலாம். ஆனால், வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எவ்வித முயற்சியையும் செய்யக்கூடாது - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm