இந்தியாவுக்கு மற்றொரு நாட்டின் ஒப்புதல் ஏன் தேவை: முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: 'தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: ரஷ்யாவில் இருந்து, 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க, அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்? விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு பயிற்சியில் பங்கேற்ற உடனேயே, ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க் கப்பலை, அமெரிக்கா மூழ்கடித்ததும் கவலை அளிக்கிறது. பன்னாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல், அத்தகைய விதியை சந்திக்கும்போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்ற முடியாது. இந்தியாவின் நீண்ட கால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையின் பாரம்பரியத்தில், மத்திய பா.ஜ., அரசு முற்றிலும் சமரசம் செய்ததாக தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm