/ செய்திகள் / படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்

படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்

காரைக்குடி: ''படித்தவனுக்கு மதிப்பில்லை. நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு இருக்கிறது. காரணம், படித்தவனும் நடித்தவனை நாட்டிற்கு ஆள கூப்பிடுவதால், இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது: ஓட்டுக்கு காசு வாங்கிவிட்டால் மீண்டும் அரசியல்வாதிகளை கொள்ளை அடிக்கத்தான் தூண்டும். காரைக்குடியில் ஒரு ஓரத்தில் நின்று உங்கள் மகன் பேசுகிறேன் என்று நினைக்க கூடாது. ஓட்டுமொத்த தமிழ் குடிக்காக தான் உங்கள் மகன் இதை பேசுகிறேன். நீங்கள் படித்த பிள்ளைகள். நீங்கள் நினைத்தால் மகத்தான மாற்றத்தை இங்கே கொண்டு வர முடியும். ஒரு தம்பி ஒரு கவிதை போல எழுதி இருந்தான். இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை. நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு இருக்கிறது. காரணம், படித்தவனும் நடித்தவனை நாட்டிற்கு ஆள கூப்பிடுவதால், இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தெரியுமா?

விடுதலை போராட்டத்தில் பங்கு எடுக்காதவனை, 25 ஆண்டுகள் ஆள வைத்தீர்கள். அன்பு பெற்றோர்கள் நான் எனக்கு ஓட்டு கேட்கவில்லை. உங்களுக்கு தான் கேட்கிறேன். என் வெற்றி என் வெற்றி அல்ல. நீங்கள் கை சின்னத்திற்கு போட்டீர்கள், அவர் வென்றார். நீங்கள் தோற்றீர்கள். கார்த்தி சிதம்பரத்துக்கு போட்டீர்கள். அவர் வென்று எம்பி ஆனார். நீங்கள் தோற்றீர்கள். ப.சிதம்பரத்துக்கு போட்டீர்கள், அவர் பலமுறை வென்றார்.நீங்கள் தோற்றீர்கள், ஒன்றும் கிடையாது. 3 முறை மத்தியில் அமைச்சராக இருந்தவர்கள் ஊர் என்று இதை எவனிடமாவது காட்டி விடு, எவனையாவது சொல்ல சொல்லும் பார்க்கும். காரைக்குடி ஊர் எங்கு இருக்கிறது என்று எவனுக்காவது தெரியுமா? ஒரு பதவியிலும் இல்லாத உன் மகன், சாதாரண மகன், காரைக்குடியில் போட்டி என்று சொன்ன உடன், உலகத்தில் காரைக்குடி தெரியாத ஒருத்தன் இருக்கிறாரானா என்று கேளு.

வலிமை மிக்க ஆயுதம்

இந்த மகனை வெல்ல வைக்க ஜப்பானில் இருந்து, துபாயில் இருந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங், அரபு நாட்டில் இருந்து, இலங்கையில் இருந்து, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். என் வெற்றி, அவன் வெற்றி. என் வெற்றி, உன் வெற்றி. என் வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றி, அதனால் அவன் நினைக்கிறான். அதனால் மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த மண்ணில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். வாக்கு என்பது நம்மை காக்க வேண்டும். நம் மொழி, நம் இனத்தை காக்க வேண்டும். இனத்தின் மானத்தை காக்க வேண்டும். மண்ணை காக்க வேண்டும். மண் வளத்தை காக்க வேண்டும். மக்கள் நலனை காக்க வேண்டும். வாக்கு என்பது ஜனநாயகத்தின் வலிமை மிக்க ஆயுதம். அதனை என் அன்பு சொந்தங்கள் அநீதிக்கு எதிராக பயன்படுத்த வேண்டும், அதுதான் மாற்றம். ஜனநாயகம் பணநாயகம் ஆனதால் நாடே சீரழிந்து போனது. இவ்வாறு சீமான் பேசினார்.தினமலர் நேரலைகாரைக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடைசி கட்ட பிரசாரம் மேற்கொண்டார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

rajasekar jayaraman
ஏப் 22, 2026 06:15

பாம்பறியும் பாம்பின் கால் நடிகனை பற்றி ஒரு நடிகனுக்கு தான் தெரியும்.


M Ramachandran
ஏப் 21, 2026 20:31

ஏன் ஜோசப் விஜயுடன் கூட்டணி என்று முதலிலேயா குண்டு போட்டு வைத்திருக்கலாம். உங்க ஒட்டு அதவிகதம் இப்போ பூஜ்யத்தை நெருங்க்குதா? அப்போது இனி அயல் நாட்டில் கைய்யேந்த முடியாத நிலைக்கு தள்ள பட்டு விட்டீர்களா?


venugopal s
ஏப் 21, 2026 18:08

இவர் படித்தவரா? நம்ப முடியவில்லை!


அப்பாவி
ஏப் 21, 2026 17:21

இவரும்.ஒரு கூத்தாடிதான்.


Raj
ஏப் 21, 2026 16:59

அரசியலில் விமர்சனம் என்பது இருக்கும் நாகரீக அரசியலாக பேச வேண்டும், தற்குறியாக பேசக்கூடாது. நீயும் ஒரு நடிகன் தான், ஒரு நடிகையின் விவகாரத்தில் சிக்கியவன் தான், அப்போ நீர் படித்தவன் கிடையாது அப்படித்தானே. எல்லா கட்சிகளுக்கும் கிலி. எத்தனையோ புதிய கட்சிகள் தோன்றின ஆனால் விஜய் கட்சி தொடங்கியவுடன் உங்கள் தொடை நடுங்குகிறது.


T.sthivinayagam
ஏப் 21, 2026 16:48

உங்கள் நடிப்பு மட்டும் எந்த விதத்திலும் குறைவில்லை மக்கள் திரள் நிதியை சுயலாபத்துக்காக பத்து ஆண்டுகளாக வீணாக்கி கொண்டு இருக்கிறிர்கள்


BE INDIAN
ஏப் 21, 2026 16:48

இவருடைய முதல் அடையாளமே சினிமா பின்புலம்தான் ..


Marai Nayagan
ஏப் 21, 2026 15:52

அப்போ அண்ணாமலை தானே படித்தவன்? நீயும் ஜேக்கப் விசை யம் சினிமாக்கார நடிகன் இப்போது அரசியலில் திமுக கொடுக்கும் காசுக்கு நடிக்கிற ...அவளவுதான்


Marai Nayagan
ஏப் 21, 2026 15:50

சைமன் மற்றும் ஜேக்கப் விஜய் திராவிட -மிசநரி கைகூலிகள்...திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து உதை நிதி முதல்வர் ஆக வேலை செய்பவர்கள்... ஜாக்ரதை மக்களே . நம் ஓட்டை பிரிக்க விட வேண்டாம். முதலில் திமுக ஒழிப்பு...பின்பு மற்றவை...


Marai Nayagan
ஏப் 21, 2026 15:50

சைமன் திருட்டு திமுகவின் நீண்ட நாள் பீனாமீ பி டீம்...திமுகவை திட்டுவது போல நடித்து திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து அவர்கள் திருடும் காசில் பங்கு போட்டு கொள்வார்கள். இப்போ முட்டு கொடுத்து வாழ்க்கை யை ஓட்டுகிறார்கள்.