உத்தரவாதம் அளித்தால் அண்ணாமலை போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுத்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வேட்பாளர்களுக்காக நேற்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை. அப்போது மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் இருந்து போன் வந்தது. எடுத்து பேசிய அண்ணாமலையிடம்,''கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் உள்ளது. நீங்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். உடனடியாக புறப்பட்டு, சென்னை வர வேண்டும். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்கிறேன்,'' என சொல்லி, அவரை சென்னைக்கு அவசரமாக வரவழைத்தார் பீயூஷ் கோயல். அதையடுத்து அவர், சென்னை கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக 'நீங்கள், வரும் சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும். இது கட்சித் தலைமையின் விருப்பம். மற்ற எல்லா தலைவர்களும் தேர்தலில் போட்டியிடும்போது, நீங்கள் மட்டும் ஒதுங்கினால், கட்சிக்குள் ஏதோ குழப்பம் இருப்பது போன்ற எண்ணம் வெளிப்படுகிறது. 'அ.தி.மு.க.,விடம் இருந்து பா.ஜ.,வுக்கு பெறப்பட்டிருக்கும் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வேண்டும்' என்று பீயூஷ் கோயல் வலியுறுத்திச் சொல்ல, முதலில் அதை மறுத்திருக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்தும், அண்ணாமலையை போட்டியிடச் சொல்லி வலியுறுத்தி உள்ளார், கோயல். ஆனால், அண்ணாமலை பிடிகொடுக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவாதம் எதிர்பார்ப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm