/ செய்திகள் / இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்; அதிமுக எம்பி தம்பிதுரை

இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்; அதிமுக எம்பி தம்பிதுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீண்டும் இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்பார்; மக்கள் உணர்வு, ஆதரவு அதிமுகவுக்கே உள்ளது.எங்களது கட்சியின் பொதுச்செயலாளர், மக்களுடைய தலைவர் அவர் நல்லது நாட்டுக்கு தருவார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.

நல்லாட்சி!

அதிமுக-திமுக பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, ''அது எல்லாம் அவர்கள் தலைவர்கள் சொல்வார்கள், கட்சியின் பொதுச்செயலாளர் நல்லாட்சி தருவார்'' என்றார் தம்பிதுரை.திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க உள்ளது என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், தம்பிதுரையின் இத்தகைய பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !