/ செய்திகள் / நானும் டெல்டாக்காரன்தான்; சொல்லிக்கொள்கிறார் உதயநிதி

நானும் டெல்டாக்காரன்தான்; சொல்லிக்கொள்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம் : தேர்தல் களத்திற்கு சசிகலா வந்துவிட்டதால், இபிஎஸ் ஐஅவர் பார்த்துக்கொள்வார், நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம் என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.தி.மு.க., கூட்டணியில், நாகை மாவட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் ஜவாஹிருல்லா, புகழேந்தி, லதா ஆகியோருக்கு ஒட்டு கேட்டு நாகையில் உதயநிதி பேசியதாவது:டெல்டாக்காரன் என்ற உரிமையில் உங்கள் முன் நிற்கிறேன். நான் போட்டோவை காட்டினால் இபிஎஸ்க்கு கோபம் வருகிறது. டில்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பது தான் சட்டசபை தேர்தலில் போட்டி. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர். டில்லி அணிக்கு மோடி தலைவர் அவ்வளவுதான்.தமிழகத்திற்கு மத்திய அரசு ஏதாவது ஒரு திட்டத்தை கொடுத்துள்ளதா, தேர்தல் என்பதால் மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு டில்லியில் இருந்து பணம் வருவதில்லை.அரசியலில் முரட்டு தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால் இபிஎஸ் தான் மோடியின் நம்பர் 1 முரட்டு அடிமை. உதயநிதிக்கு எந்த அனுபவமும் கிடையாது என்கிறார். செத்து போ என கூறிவிட்டார். என் உயிரை வாங்குகிறான். பால்டாயில் குடித்து சாவு என்கிறார். காலில் விழுந்து பதவி வாங்கிய அனுபவம் எனக்கு கிடையாதுதான். சசிகலா காலை பிடித்து தான் பதவி வாங்கினார்.மரியாதை நிமித்தமாக நீங்கள் காலில் விழுந்தது தப்பு கிடையாது. சசிகலா காலை வாரி விட்டதுதான் தப்பு என்கிறோம். இப்போது சசிகலா தேர்தல் களத்திற்கு உள்ளே வந்துவிட்டார். அவர் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இனிமே பெரியவர்கள் அவர்களே பேசிக்கொள்ளட்டும். இனிமே நமக்கு வேலையில்லை வேடிக்கை மட்டும் பார்ப்போம்.இபிஎஸ் ஐ அடிமையாக பயன்படுத்தி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயன்படுத்த மோடி பார்க்கிறார். எப்போதும் தமிழ்நாடு டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

பா மாதவன்
ஏப் 13, 2026 19:55

நானும் கிறிஸ்தவன் தான் என்று சர்ச் பாதிரியார் முன்னிலையிலும், ரம்ஜான் நோன்பு கூழ் குடிக்கும் போது குல்லா அணிந்து இசுலாமியர் போலவும் நடிக்க தெரிந்த இந்த நடிகருக்கு, தானும் டெல்டா காரன் தான் எனவும், தான் ஒரு தெலுங்கர் எனவும் நடிக்க தெரியும். ஆனால், இவருக்கு தான் ஒரு இந்தியன் என்று தெரியவில்லை.


V Venkatachalam, Chennai-87
ஏப் 13, 2026 13:07

டெல்டாக்காரன் படத்தை யாரு எடுக்குறா? இது ஜனநாயகன் மாதிரி டமால் டுமீல் அரசியல் பின்னணி உண்டா? முக்கியமா காலம் பதில் சொல்லும் ரஜினி சார்,


கூத்தாடி வாக்கியம்
ஏப் 13, 2026 09:18

டெல்ட்டாவிற்க்கு என்னத்த செய்தீர்கள்


Rajasekar Jayaraman
ஏப் 13, 2026 06:09

டெல்டா திருட்டு ரயில் வாரிசு.


வீரா, சிட்னி
ஏப் 13, 2026 05:51

டெல்டாகாரனுக்கு பால்டாயில் எப்படி எதுக்கு பயன் படுத்த வேண்டும் என்று தெரியும். சார், உங்களுக்கு???


Sun
ஏப் 13, 2026 05:30

பால்டாயில் கேட்டா பாமாயிலை வாங்கிக் கொடுத்தவன் எவன்?


பா மாதவன்
ஏப் 12, 2026 22:14

கிறிஸ்தவ மதச்சார்புள்ள கட்சிகளுடனும் இஸ்லாமிய மத சார்புள்ள கட்சிகளுடனும் கூட்டு வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி என்று எப்படி சொல்லலாம் . வேண்டுமானால் இந்து மதம் சாராத கூட்டணி என்று தைரியமாக சொல்லட்டும். எத்தனை நாளைக்கு இப்படி இந்துக்களை மட்டும் ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்துவீர்கள். செய்வது அனைத்தும் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே. ஆனால், மத சார்பற்ற கூட்டணி என்று பொய் பித்தலாட்டங்கள்..


Baskaran
ஏப் 12, 2026 21:22

காசா பணமா, வாய்க்கு எது வருதோ அதை சொல்லு. இளிச்சவாயினுங்க இருக்கிறவரைக்கும் எதுவேனாலும் பேசலாம்.


ஆரூர் ரங்
ஏப் 12, 2026 21:19

ஜவாஹிருல்லா கிரிமினல் வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று ஜாமீனில் இருப்பவர். அவருக்கு உதயா பிரச்சாரம் செய்வது பொருத்தம்தான்.


sankaranarayanan
ஏப் 12, 2026 21:09

ஹலோ ஹலோ நீ ஒங்கோல் காரன்னு சொல்லு அப்போதான் பொருத்தமாக இருக்கும் யாரை நீ ஏமாற்றுகிறாய் உனக்கும் டெல்டாவுக்கும் சம்பந்தமே இல்லை டெல்டாவிழ்க எத்தனை நதிகள் ஓடுகின்றன என்றாவது உனக்கு தெரியுமா இது ஒன்னும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இல்லை