/ செய்திகள் / தேஜ கூட்டணியில் இணைகிறதா விஜய் கட்சி; மாவட்ட செயலாளர்கள் அமோக ஆதரவு

தேஜ கூட்டணியில் இணைகிறதா விஜய் கட்சி; மாவட்ட செயலாளர்கள் அமோக ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் சட்டசபை தேர்தலை தேஜ கூட்டணியில் இணைந்து சந்திக்க தவெகவின் 90 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.தவெக என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் தற்போது கரூர் சம்பவம், நடிகை திரிஷா விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், இது பற்றி தமிழகத்தில் கூட்டணி தலைவரான இபிஎஸ், எதுவும ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவெகவின் ஆதவ் ஆர்ஜூனாவும் நேற்று நடந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றார். நிர்மல் குமாரும்இதேபோன்ற கருத்தை கூறினார்.எனினும் பாஜ தேசிய தலைமை, பல்வேறு வழிகளில் விஜய் தரப்பினரை தொடர்பு கொண்டு கூட்டணியில் சேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், விஜய் அதிகப்படியான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தங்கள் கூட்டணிக்கு வந்து விடுமாறு, விஜய் தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே இன்று மார்ச் 13ம் தேதி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. விஜய் உத்தரவுப்படி தான் இந்த கூட்டம் நடந்துள்ளது. இதில் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றனர்.அவர்களிடம் தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களில் 90 சதவீதம் பேர் கூட்டணி வைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விஜய் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வேண்டும், விஜய்க்கு துணை முதல்வர் பதவியை கேட்டுப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன் வைத்துள்ளனர். தேஜ கூட்டணியில் தவெகவை இணைக்க நடக்கும் முயற்சிகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !