/ செய்திகள் /  ஸ்டாலின் அஞ்ச மாட்டார்: உதயநிதி சவால்

 ஸ்டாலின் அஞ்ச மாட்டார்: உதயநிதி சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலுார்: ''தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,'' என துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார். தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை; 100 நாள் வேலை திட்டத்தை முடக்குகிறது. இதற்கு, அ.தி.மு.க., துணை நிற்கிறது. விரைவில் பா.ஜ.,விடம், அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். பா.ஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்; முதல்வர் ஸ்டாலின் அஞ்ச மாட்டார். ஒட்டு மொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் கிளீன் போல்ட் ஆக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !