/ செய்திகள் / கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை

கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக எங்களுக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.இதன் பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: உங்களை மதிக்கக்கூடியவர்கள். தகவல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பேசி கொண்டு இருக்கிறோம். முடிந்த பிறகு உங்களிடம் சொல்வோம்.பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதற்கு மேல் சொல்வதற்கு இல்லை.எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசி கொண்டு இருக்கிறோம். இழுபறி இல்லை. எங்களுக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை. முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !