நல்லா போடுறாங்க சீன்
சென்னை: திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, சிவா ஆகியோர் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இதன் காரணமாக, வி.சி., தலைவர் திருமாவளவன், கடுமையாக சீமானை விமர்சித்து வருகிறார். நா.த.க.,விற்கு எதிராக, 'தமிழ் எழுச்சி' மாநாட்டை நடத்தப்போவதாக, திருமாவளவன் அறிவித்துள்ளார். இதனால் இரு கட்சி தொண்டர்கள் இடையே, சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது. பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும், திருமாவளவன் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, தி.மு.க., - எம்.பி., சிவா ஆகியோர், நேற்று சந்தித்துக் கொண்டனர். நான்கு பேரையும் சிவா செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருத்து வேறுபாடுடைய, நான்கு அரசியல் கட்சிகளின், முக்கிய தலைவர்கள் சந்தித்து கொண்டது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am