/ செய்திகள் / 3 மாநிலங்களில் தேர்தல் நிறைவு: புதுச்சேரியில் அதிக ஓட்டுப்பதிவு

3 மாநிலங்களில் தேர்தல் நிறைவு: புதுச்சேரியில் அதிக ஓட்டுப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 09) நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, கேரளாவில் 75.01, புதுச்சேரியில் 86.92%, அசாமில் 84.42% ஓட்டுப்பதிவாகி இருக்கிறது.புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் இன்று (ஏப்ரல் 09) நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் செய்துள்ளனர். 3 இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.கேரளாவில் முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.3 மாநில கள நிலவரம் குறித்து ஓர் சிறப்பு அலசல்!

புதுச்சேரி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மொத்தம், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி, தி.மு.க., - காங்., கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவியது. 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி உடையவர்கள். இவர்களில், 5 லட்சம் பேர் பெண்கள்; 4.46 லட்சம் பேர் ஆண்கள். 30 தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம் ஆகும்.

கேரளம்

கேரளாவில், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.32 கோடி பேர் ஆண்கள். 1.39 கோடி பேர் பெண்கள். 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 140 தொகுதிகளில், 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மாலை 5 மணி நிலவரப்படி 75. 01 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

அசாம்

வடகிழக்கு மாநிலமான அசாமில், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.25 கோடி பேர் ஆண்கள்; 1.25 கோடி பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஓட்டுப்பதிவுக்காக, 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. . 126 தொகுதிகளில், 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மாலை 5 மணி நிலவரப்படி 84.42 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

3 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2026 சட்டசபை தேர்தல்களில் கேரள மக்கள் பெருமளவில் ஓட்டளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து பெருமளவில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஓட்டளிப்பதில், கேரள மக்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு நான் அறைகூவல் விடுக்கிறேன். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த நமது இளைஞர்களுக்கும் பெண் வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது. அசாம் மக்கள் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!புதுச்சேரி தேர்தல் நிலவரம்; களத்தில் தினமலர்.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Barakat Ali
ஏப் 09, 2026 21:10

ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்து வாக்களித்துள்ளனர் என்று திமுக சொல்லக்கூடும் ....


சந்திரன்
ஏப் 09, 2026 19:17

ஓட்டு போட்ட மக்களை அனைவருக்கும் நன்றி. தாங்கள் விரும்பி வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்று தொகுதிக்கு நல்லது செய்கிறார்களா என கவனியுங்கள். அடுத்த முறை நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள்


ديفيد رافائيل
ஏப் 09, 2026 19:00

புதுச்சேரி மாநில எல்லை குறைந்த area குறைவான மக்கள் தொகை தான் இருக்கும். புதுச்சேரி தெருவுக்கு ஒரு MLA தொகுதி இருக்க்ம் என்பதை நினைவில் கொள்ளவும்


Ganesun Iyer
ஏப் 09, 2026 20:07

தெருவுக்கு தெருவே இருக்கட்டும். சதவிகிதம் என்பது அங்குள்ள மொத்த வாக்காளர்களில் ஓட்டு போட்டவர்கள் சதவிகிதம்.. பேருக்கேத்தமாதிரி உதாரணம்.. பத்தாவது வகுப்பில் 500 மார்க்குக்கு 40% என்பது 200. +2ல் 1000 சதவிகிதம் 40% என்பது 400..


Ganesun Iyer
ஏப் 09, 2026 20:07

தெருவுக்கு தெருவே இருக்கட்டும். சதவிகிதம் என்பது அங்குள்ள மொத்த வாக்காளர்களில் ஓட்டு போட்டவர்கள் சதவிகிதம்.. பேருக்கேத்தமாதிரி உதாரணம்.. பத்தாவது வகுப்பில் 500 மார்க்குக்கு 40% என்பது 200. +2ல் 1000 சதவிகிதம் 40% என்பது 400..


Santhakumar Srinivasalu
ஏப் 09, 2026 18:57

கேரள மக்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதா? சரியா இலவசத்தால் யாரும் கவனிக்க வில்லையா?


சாமானியன்
ஏப் 09, 2026 17:38

போலி வாக்காளர்களை S I R மூலம் நீக்கப்பட்டுள்ளதால், கண்டிப்பாக சதவீதம் ஜாஸ்தியாகத் தான் வரும். வாழ்க தேர்தல் ஆணயம். வாழ்க மோடிஜீ.


நிக்கோல்தாம்சன்
ஏப் 09, 2026 16:32

100 சதவீத லிட்டரசி என்று பீற்றிக்கொள்ளும் மாநிலத்தில் குறைவா இருக்கே ? ஓஹோ கோணிச்சாக்கு எல்லாம் சாயங்காலம் தான் வரும் இல்லையா


R.MURALIKRISHNAN
ஏப் 09, 2026 21:10

அங்கு குடிக்கு கொடுக்கும் மரியாதை இப்போது இதற்கு இல்லை. படிப்பறிவு ஓவராகியிருக்கும்


vidhu
ஏப் 09, 2026 14:22

தேர்தல் அன்று எல்லோருக்கும் விடுமுறை விட்டாலும் நிறையபேர் ஓட்டு போடுவதில்லை. இதை தவிர்க்க விடுமுறை முடிந்து வரும் அடுத்த நாள் அவர்கள் கைவிரலில் மை இருந்தால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். இல்லாவிடில் 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஓட்டு சதவிகிதம் அதிகரிக்கும். நம் ஓட்டு நம் உரிமை.


Keshavan.J
ஏப் 09, 2026 19:06

மிக நல்ல யோசனை. ஆனால் இந்த மோசடிக்காரர்கள் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டுத் தப்பித்துவிடுவார்கள்.


Kumar
ஏப் 09, 2026 19:21

Mark can be applied using black permanent marker. No need to go polling booth.


தமிழ்வேள்
ஏப் 09, 2026 19:57

பொய் சர்டிபிகேட் கொடுக்கும் டாக்டரின் மருத்துவ பதிவுகளை ஓராண்டு காலம் சஸ்பெண்டு செய்தால் திருட்டு சர்டிபிகேட் கொடுக்கும் எண்ணம் வராது...மேலும் ஓட்டு போடாதவனின் ஆதார் அட்டை ஓராண்டு காலம் முடக்கப்பட்டது என்றால், ரேஷன் மொபைல் பேங்க் அக்கவுண்ட் என அனைத்தும் முடங்கும்.அது சரியான தண்டனை ஆக இருக்கும்.


SANKAR
ஏப் 09, 2026 20:43

very good idea.appreciate.only fear of punishment works in this country.


SANKAR
ஏப் 09, 2026 20:46

no . different type of ink used for voting.basically a facility to issue receipt was experimented some time ago..similar to atm slip...it must be revived.it can not be faked


Narayanan
ஏப் 09, 2026 13:51

கோவிலுக்கு ஏன் போகிறோம் ? நாம் செய்த தவறுகள் மன்னிக்கப்படவேண்டும் என்று. நம் சனாதனத்தை கிண்டல் செய்யும் எவருக்கும் ஹிந்துக்களும் கோவிகளுக்கு செல்பவர்களும் மறந்தும் வாக்கு அளிக்கவேண்டாம் . இறைவன் நின்று கொல்வான் .


S SRINIVASAN
ஏப் 09, 2026 13:43

வெற்றி. வெற்றி. வெற்றி. ஜெய் ஸ்ரீராம்.


S SRINIVASAN
ஏப் 09, 2026 09:31

இந்துக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும் கட்டாயமாக ஒட்டளிக்க வேண்டும்.