இடைப்பாடி த.வெ.க., வேட்பாளர் எங்கே? சேலம் மேற்கு மா.செ., திடுக் தகவல்
சேலம் மாவட்டம், வலசையூர், மணிகண்டன் நகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மகன் அருண்குமார், 43. இவர், இடைப்பாடி தொகுதியில், த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக, அவரது மனைவி நித்யா மனு செய்தார். நேற்று முன்தினம், மனுபரிசீலனை நடந்தபோது, வேட்பாளர் அருண்குமாரும், மாற்று வேட்பாளரான அவரது மனைவியும் அங்கு இல்லை. அருண்குமார் வேட்புமனுவில், 10 பேர் முன்மொழிவுக்கு, எட்டு பேரும்; மனைவி வேட்புமனுவில் ஏழு பேரின் முன்மொழிவு கையெழுத்தும் இருந்ததால், இரண்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் அ.தி.மு.க.,விடம் விலை போய்விட்டதாக, த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்டினர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தீ உ காவின் குள்ள நரி தணம் தேர்தல் நேரத்தில் பேயாட்டம் ஆடும். எல்லாம் மக்களிடம் கொள்ளையடித்து குவித்த திருட்டு பணம் வேலையை செய்யுது.
பெட்டி வாங்கி கம்பி நீட்டி இருப்பான்.. இப்படி இருக்கிறது சினிமா கட்சிகள். எப்படி இவர்கள் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார்கள்?
விஜய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..பிரச்சாரத்துக்கு வரலாம்
EPS செஞ்ச வேலையா தான் இருக்கும்... பயங்கர தில்லு முள்ளு கார ஆளு
See the election record of edappadi Palanisamy in that constituency. This the work of dmk
அவர் தெலுகு தேசம் கட்சியில் சேர விஜயவாடா போயிருக்கலாம் என்கிறார்கள்.
குஜராத் மாடல் தேர்தல். அங்கே தான் போட்டி வேட்பாளர்கள் வாபஸ் வாங்கிட்டு லம்ப்பாக பணத்துடன் செட்டில் ஆயிடுவாங்க.
மாயா பஜார்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am