/ செய்திகள் / தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி: திருமாவளவன் ஆரூடம்

தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி: திருமாவளவன் ஆரூடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: '' சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் அவர் பேசியதாவது: கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது தான் பாஜவின் அரசியல் பண்பு. அது தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. யார் கூட இருந்து தோளில் சுமக்கின்றனரோ அவர்களை வீழ்த்தி மிதிப்பது தான் பாஜவின் பண்பு. தற்போது தமிழகத்தில் அதிமுக 2வது இடத்தில் இருப்பது பாஜ கண்ணை உறுத்துகிறது.

பாஜவின் நோக்கம்

அதிமுகவை வீழ்த்திவிட்டு 2வது இடத்திற்கு வர வேண்டும் என்பது தான் பாஜவின் நோக்கம். அதனால் தான் பாஜவை முன்னிறுத்துகிறார்கள். பாஜ 27 இடங்களில் போட்டியிடுகிறது. தமாகாவும் 5 இடங்களில் போட்டியிடுகிறது. அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துள்ளார். இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகப் போகிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.இதன் பிறகு, செய்யூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வனை ஆதரித்து திருமாவளவன் பேசியதாவது:நாம் மோடியா லேடியா என ஜெயலலிதா சவால் விட்டவர். இபிஎஸ் சவால் விட முடியுமா?திமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம். திமுக அரசை சிறுத்தைகளின் அரசாக நம்மால் ஏற்க முடியும். நம்ப முடியும். திமுக தலைமையிலான அரசு, விசிகவின் அரசாக இயங்க முடியும்..பாஜ , பாமக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது.

எதிர்காலம் முக்கியம்

எங்களுக்கு எத்தனை இடங்கள் என்பது முக்கியமில்லை. எங்கள் எதிர்காலம், தமிழகத்தின், தமிழ் மக்களின் எதிர்காலம் முக்கியம். மிட்டாய் காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. ஏமாறும் சராசரி சக்திகள் நாங்கள் அல்ல. அதனால் தான் திமுக உடன் உள்ள உறவை உடும்பு பிடி உறவு என்று சொல்கிறேன். இதற்கு காரணம் கொள்கை பிடிப்பு. நாம் பேசும் சமூக நீதி அரசியலை திமுக பேசுகிறது. நாம் எதிர்க்கும் வலதுசாரி அரசியலை திமுக எதிர்க்கிறது. நாம் எதிர்க்கும் மதவாத அரசியலை காங்கிரஸ் எதிர்க்கிறது. நாம் எதிர்க்கும் ஜாதிவாரி அரசியலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். நாம் எதிர்க்கும் வெறுப்பு அரசியலை இஸ்லாமிய கட்சிகள் எதிர்க்கின்றன.நாம் பேசும் சகோதரத்துவ அரசியலை திமுக பேசுகிறது. இதனால் தான் கொள்கை சார்ந்து திமுக உடன் இருக்கிறோம்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Krishna Moorthy
ஏப் 13, 2026 09:39

அதிமுக அழிந்தால் சந்தோஷப்படவேண்டிய திருமா, வருத்தப்படுவது ஏன்?. இப்பொழுது ஏதோ சில சீட்டுகள் கிடைக்கிறது. அதிமுக அழிந்தால் அதுவும் கிடைக்காது. அத்துடன் கூட்டணி மாற்றுவேன் என பயம் காட்டவும் முடியாது. புரியுதா ம(மா)க்களே.


ram
ஏப் 13, 2026 09:12

ஜாதி வச்சு பொழப்பு நடத்தும் தற்குரிங்க..


ram
ஏப் 13, 2026 09:09

நிலைமை என்னாகுமென யோசிச்சு வச்சுக்கோ


Natarajan Ramanathan
ஏப் 12, 2026 21:51

தேர்தலுக்கு பிறகு விசிக இருக்குமா என்றே தெரியாது.


sankaranarayanan
ஏப் 12, 2026 21:23

திருமா எப்போதிலிருந்து ஆரூடம் சொல்ல ஆராம்பித்துவிட்டார் பாவம் இவருக்கு அரசியல் சரி இல்லையென்று யாரோ ஜோதிடர் சொல்லப்போக, உடனே இப்போதிலிருந்தே ஒரே தலையாக ஜோதிட கட்டுகளை கையில் எடுத்துக்கொண்டு, கையில் பேப்பரும் பேனாவுமாக, ஊர் ஊராக தேர்தல் சமயத்தில் சென்று, அரசியல் ஜோதிடம் சொல்றாராம் இதிலேயும் அவருக்கு நல்ல வருமான் கிடைக்கும் நாற்காலிகளும் கிடைக்கும் நல்ல பணிதான் தொடரட்டும்


சந்துரு
ஏப் 12, 2026 21:21

நேத்து கூட்டணிக்கு வந்த பிரேமலதா இவர ஒரு மனுசனா கூட மேடையில மதிக்கல. தன்னோட மரியாத காத்துல பறக்கிறப்ப அடுத்தவர்கள் மரியாதைப் பத்தி இவரு கவலைப் பட்டுக்கிட்டு இருக்காரு.


Ms Mahadevan Mahadevan
ஏப் 12, 2026 20:33

ஜாதி சொல்லி பிழைக்கும் மோசமான உங்களுக்கு இந்த தேர்தல் சரியான பாடம் சொல்லித்தரும். பிற காட்சிகளை பற்றி நீங்கள் ஆருடம் சொல்ல வேண்டாம்


kulanthai kannan
ஏப் 12, 2026 20:09

இந்தத் தேர்தலோடு கட்டப் பஞ்சாயத்து புள்ளிங்கோக்களுக்கு ஃபுல் ஸ்டாப்.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 12, 2026 19:36

திமுகவையும் திருமாவளவனையும் திட்டி அரசியல் செய்த பிரேமலதாவுக்கு உன்னை விட அதிக சீட், காலம் காலமாக திமுகவுக்கு ஊதுகுழலாக அடிமையாக இருந்த உனக்கு நேற்று வந்தவர்களை விட குறைவான சீட்டு அதைவிட உன் அடிமை தொண்டர்கள் பிரேமலதா கட்சிக்கு தேர்தல் வேலை செய்வதை பாத்தாலே சிரிப்பு தான் வருது. உன் எதிகாலமும் உன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.


vetrivel
ஏப் 12, 2026 19:29

முதலில் உங்கள் கட்சி என்னவாகும் என்று கவனியுங்கள்.கட்சி விஜயாலும், திமுக வாலும் காணாமல் போகப் போகிறது.சிறுத்தை பூனையாகும்.