/ செய்திகள் / சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் அபின் தினேஷ் மோதக்

சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் அபின் தினேஷ் மோதக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்படடு, புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் இன்று ஏப்.,10 பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். டிஜிபி ஆக இருந்த வெங்கட்ராமனுக்கு பதில், சந்தீப் ராய் ரத்தோர் புதிய டிஜிபி ஆக பதவியேற்றுள்ளார். மேலும் பல மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து இன்று இரவு அபின் தினேஷ் மோதக் சென்னை போலீஸ் கமிஷனர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புகார்

'சமூக ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், தமிழக பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்க்கது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

வாய்மையே வெல்லும் ,மனாமா
ஏப் 11, 2026 11:11

சொம்பு ஜால்ரா அதிகாரிகளை வீட்டுக்கு நிரந்தர மாக அனுப்ப வேண்டும்


venugopal s
ஏப் 11, 2026 10:49

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜகவின் அடியாட்களான சி பி ஐ, அமலாக்கத்துறையிலும் இதுபோன்ற மாற்றல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்ததா?


Krishna
ஏப் 10, 2026 23:38

Arrest-Prosecute-Convict him for Dreaded Crimes of AntiPeople esp Illegal Fake-Encounters, AntiFreedom of Expression etc etc


S Srinivasan
ஏப் 10, 2026 21:55

he is not IPS, he is sombu for DMK


பல்லவி
ஏப் 10, 2026 21:52

வடக்கு மண்டல மக்கள் தமிழர்களை வெறுப்பது ஒன்றும் புதிதல்ல என்று எல்லோரும் அறிவார்கள்.


Suppan
ஏப் 10, 2026 21:52

கடைசி வரை "யார் இந்த சார்" வெளிவராமல் பார்த்துக்கொண்டவரோ ?


ஊர்குருவி
ஏப் 10, 2026 21:49

IAS ,IPS எல்லா பதவிகளையும் அகில இந்திய பதவிகளாக மாற்றி 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை அடுத்த மாநிலத்திற்கு மாற்றவேண்டும் .ஒரு மாநிலத்திலேயே அவர்களை வைத்திருக்கக்கூடாது .இதை செயல்படுத்த இந்தியன் அட்மினிஸ்டரேஷன் கமிஷன் என்று அமைப்பை தன்னிச்சையாக செயல்படும் விதமாக மாற்றவேண்டும் .அதை மேற்பார்வை இட எல்லாக்கட்சி உறுப்பினராக கொண்ட குழு அமைத்து மூன்று மாதத்திற்கு ஒருமுறைகூடி பிரச்னைகளிருப்பின் விவாதிக்கவேண்டும் .அப்போதுதான் அவர்களுக்கு அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படமுடியும் .


Palanisamy Sekar
ஏப் 10, 2026 21:39

இவர் போன்ற அதிகாரிகள் எதற்கு படித்தார்கள்? அரசியலுக்கு நேரடியாக சேர்ந்துவிடலாம். ஆளும் கட்சியினருக்கு சேவகம் செய்வதையே குறிக்கோளாக செயல்படுகின்ற இவரது பதவியை பிடுங்கிவிடலாம். தனிமனித வன்மத்தை வளர்த்துக்கொண்டு அவரை தொடர்ந்து பதவியை வைத்துக்கொண்டு வன்மம் தீர்க்க நினைக்கும் இவரெல்லாம் போலீஸ் துறைக்கே களங்கம் என்பேன். வேறு மாநிலத்திற்கு மாற்றும் முன்னர் இவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும். இவர் மீதான விசாரணையை சொத்து சேர்ப்பு வழக்கில் சேர்த்து கண்காணிக்கப்பட வேண்டும். லேட்டாக நடவடிக்கை எடுத்தாலும் லேட்டஸ்ட்டாக எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். பாஜகவினரின் செயலுக்கு வந்தனங்கள்


chinnamanibalan
ஏப் 10, 2026 21:37

திமுக வின் 200/234 வெற்றி என்ற நம்பிக்கையில் சரிவு ஆரம்பமாகி இருக்கிறது.


V K
ஏப் 10, 2026 21:33

இன்னும் வருண் இருக்கான் அவனை ஏன் மாற்றவில்லை