/ செய்திகள் / விஜய் பற்றி விமர்சிக்க மாட்டேன்: சொல்கிறார் சுந்தர்.சி

விஜய் பற்றி விமர்சிக்க மாட்டேன்: சொல்கிறார் சுந்தர்.சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தவெக பற்றியும், விஜய் பற்றியும் விமர்சிக்க மாட்டேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.மதுரை மத்திய தொகுதி தேஜ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி நிருபர்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம், நான் இதுவரைக்கும் எத்தனையோ பேட்டிகள் கொடுத்து இருக்கிறேன். தற்போது முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருந்து பேட்டி கொடுக்கிறேன். ரொம்ப சந்தோஷமான செய்தி. மதுரை மத்திய தொகுதி மக்கள் நல்ல செய்தியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மதுரை மத்திய தொகுதி மக்கள் வெற்றிக்கனியை தருவார்கள். இனி மாதத்தில் 15 நாட்கள் மதுரையில் தான் இருக்கும். திரைப்பட துறையில் 30 வருடமாக வேணும் என்று சொல்கிற அளவுக்கு பணிபுரந்து இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட நகர்வு என்பது தேர்தல்முடிவுகளை பொறுத்து தான் இருக்கும். கண்டிப்பாக தேர்தலில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. எந்த வகையிலும் வன்முறை என்பது தண்டிக்க கூடிய ஒன்றாகும். வன்முறை அசிங்கமான விஷயம்.என்னை மாதிரி பொது ஜனங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு காரணம், இந்த மாதிரி சம்பவங்கள் தான், இப்படியே போய் கொண்டிருந்தே நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. விஜய் என் மீது மதிப்பும், அன்பும் கொண்டவர், நானும் அதே மாதிரி தான். எனது மனைவி விஜயை தம்பியாக தான் கருதுகிறார்கள், அவரும் எனது மனைவியை அக்கா என்று தான் அன்பாக கூப்பிடுவார். அதனால் எந்த வகையில் அவரை விமர்சிக்கவோ, கட்சியை பற்றி விமர்சிக்கவோ, அவரது வேட்பாளர் பற்றி சொல்லவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை போட்டி இரட்டை இலைக்கும், உதய சூரியனுக்கும் தான். அவர்களுக்கு நான் ஆதரித்து பிரசாரம் செய்து இருக்கிறேன். எனக்கு அவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்ய வருவார்கள். இவ்வாறு சுந்தர் சி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pn badhri
ஏப் 01, 2026 22:23

He got the seat due to his wife support. He is not a seasoned politician and he will not get 100% AIADMK party votes even though he is coning on AIADMK symbol. Proxy of BJP coning on AIADMK symbol is mockery. In TN elections BJP candidates will not able to secure 100% AIADMK supporters vote bank...


Prabu
ஏப் 01, 2026 15:35

போட்டி என்று வந்தால் அண்ணனாவது தம்பி யாவது . எதிரி என்றால் கொல்ல வேண்டும் அது தான் யுத்த மரபு . இந்த புரிதல் இல்லை என்றால் இவர் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 01, 2026 16:17

அவரு மஹா பாரதம் படிக்கல, முரசொலி படிச்சி இருப்பார் போல


ஆரூர் ரங்
ஏப் 01, 2026 15:28

இவரது வெற்றிக்கு மூர்த்தி உதவுவார். டக்ளஸ் நிரந்தர ஒய்வு பெறுவார்.


Anbuselvan
ஏப் 01, 2026 15:05

இவர் தரம் மிக்க அரசியல்வாதி போல தெரிகிறது. வெற்றி பெற வேண்டும்.


ponssasi
ஏப் 01, 2026 15:00

எந்த நல்ல என்னதோடவும் நீங்க அரசியலுக்கு வரவில்லை, எங்க சாதிகாரங்க பெரும்பான்மையான மக்கள் இருக்கும் தொகுதி, ஒரு நேர்மையான அறிவார்ந்த திமுகாவில் இருப்பது இவர் மட்டுமே பாரம்பரிய குடும்பத்தை தோற்கடிக்க வேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே தெரிகிறது. திமுக தமிழகத்தை ஆளக்கூடாது ஆனால் ptr அவர்கள் வெற்றிபெறவேண்டும். இவரைபோன்றவர்கள்தான் தமிழக சட்டமன்றத்துக்கு தேவை. தோற்றுவிட்டு வெளியேறுங்கள் சுந்தர் குஷ்பு அவர்களே


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 01, 2026 16:19

அவரு மதுரைக்கு என்ன கிளிச்சாருன்னு பட்டியல் போட்டா எல்லோரும் அதை பார்த்து ஓட்டு போடுவாங்க


Balaji
ஏப் 01, 2026 14:55

வீட்டிற்குள் விமர்சிக்கவேண்டாம். ஆனால் போட்டி களம் என்று வந்துவிட்டால் அண்ணணாவது தம்பியாவது. வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டாமா. மைதானத்திற்கு வந்துவிட்டு இவர் பந்தை நான் அடிக்க மாட்டேன் எண்பது போல இருக்குது இவர் வாதம். இதற்க்கு இவர் TVK வில் சேர்ந்துவிடலாம்.


V RAMASWAMY
ஏப் 01, 2026 13:31

வன்முறை தவறு என்று சொல்லும் நீங்கள் உங்கள் திரைப்படங்களிலும் அதனை தவிருங்களேன். திரைப்பட தொழிலில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்புணர்ச்சி முக்கியம், அவசியம். சமூகத்தில் பலப்பல தீவினைகளுக்கும் குற்றங்களுக்கும் ஒரு காரணம் திரைப்படங்களும் தான் என்பதை பலர் ஒப்புக்கொள்வார்.


Govi
ஏப் 01, 2026 13:21

ஒரு முதுமொழி ஞபகம் வரனும்