/ செய்திகள் /  தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு வந்தால் விடாதீர்

 தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு வந்தால் விடாதீர்

தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு வந்தால், சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் வழங்குவேன் என கூறினீர்களே, அது எங்கே என கேளுங்கள். நெல், கரும்பு உள்ளிட்டவற்றிற்கு ஆதார விலை தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே அது என்னவாயிற்று; ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் என்னவானது என தைரியமாக கேளுங்கள். ஏழை, எளிய மக்களை நசுக்கும் விதமாக பால், மின் கட்டணம், குடிநீர், பத்திரப்பதிவு மற்றும் குப்பை வரியை உயர்த்தி, தி.மு.க., அரசு மக்களின் மீது சுமையை ஏற்றியது மன்னிக்க முடியாத ஒன்று.- ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !