/ செய்திகள் /  கமலை பிரசாரத்துக்கு அழைத்த மா.கம்யூ.,

 கமலை பிரசாரத்துக்கு அழைத்த மா.கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளராக சுந்தரராஜ் அறிவிக்கப்பட்டார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலிடம் வாழ்த்து பெறுவதற்காக, மா. கம்யூ., மாநில செயலர் சண்முகத்துடன் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றார். சுந்தரராஜ் வெற்றிக்கு, கமல் தன் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது சண்முகம், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம், கொள்கை மீது உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். 'எனவே, எங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வர வேண்டும்' என கமலிடம் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sun
ஏப் 07, 2026 14:10

இதுக்குப் பேர்தான் சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது! வழியில போற ஓணான தூக்கி பாக்கெட்டுல போட்டுக்கிறது!


கண்ணன்
ஏப் 07, 2026 13:00

இனம் இனத்துடன் சேரும்


subramanian
ஏப் 07, 2026 08:37

எவனுக்கும் எதுவும் புரியாது


கம்ணாநிதி
ஏப் 07, 2026 08:22

ஒன்னால நாங் கெட்டேன்! என்னால நீ கெட்ட!!


G Mahalingam
ஏப் 07, 2026 07:17

ஆமை பூந்த இடம் விளங்காது. கமலை. அழைத்தால் இருக்கிற வோட்டும் போய் விடும்.


sankaranarayanan
ஏப் 07, 2026 06:42

யாரை பிரசாரத்திற்கு கூப்பிட்டாலும் கூப்பிடுங்கள் கமலை மட்டும் பிரச்சாரத்திற்கு தயவு சேது கூப்பிடாதிங்கள் அவர் வந்தால் இருக்கிறதும் இல்லாமல் போயிடும் பிறகு வருந்தி பயனில்லை .


Srinivasan Narasimhan
ஏப் 07, 2026 06:16

கம்யுனிஸ்ட் கட்சிக்கு இவரு வேர வந்தார்னா இருக்கரது போகும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 07, 2026 05:36

ஆண்டவர் பிரச்சாரம் செய்தால் கம்மி வெற்றி உறுதி,


vijay
ஏப் 07, 2026 05:12

இவர் வந்து என்ன பண்ணப் போறாரு


Muralidharan Somasundaram
ஏப் 07, 2026 05:05

இது தான் சொந்த காசுல சூனியம் வைத்துக்கொள்வது. ஏற்கனவே இரண்டு மூன்று ஓட்டு தான் விழும். ஆண்டவர் பிரசாரம் பண்ணா அதுவும் விழாது