/ செய்திகள் /  கமலை பிரசாரத்துக்கு அழைத்த மா.கம்யூ.,

 கமலை பிரசாரத்துக்கு அழைத்த மா.கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளராக சுந்தரராஜ் அறிவிக்கப்பட்டார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலிடம் வாழ்த்து பெறுவதற்காக, மா. கம்யூ., மாநில செயலர் சண்முகத்துடன் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றார். சுந்தரராஜ் வெற்றிக்கு, கமல் தன் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது சண்முகம், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம், கொள்கை மீது உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். 'எனவே, எங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வர வேண்டும்' என கமலிடம் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !