/ செய்திகள் / திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது; அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சம் பறிமுதல்

திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது; அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் காரில் ரூ.2.44 கோடி சிக்கியது. அதேபோல், அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் சட்டசபை தொகுதிகுட்பட்ட செங்குணம் கிராமம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது கார் டிக்கியில் 5 அட்டை பாக்ஸில் ரூ.2.44 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கார் மற்றும் 2.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு, பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் கார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் ராஜேஷ் கிருஷ்ணன் உட்பட இருவரிடமும் வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.46.88 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஏப் 21, 2026 18:15

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் வீட்டில் தொண்ணூறு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது


amicos
ஏப் 21, 2026 15:26

அணைத்து தொகுதியிலும் ஆயிரம் முதல் ஆறாயிரம் வரை பணம் கொடுக்கப்பட்டு விட்டது ,தேர்தல் கமிஷன் இந்த முறை சரியாக செயல் படவில்லை


Arul Narayanan
ஏப் 21, 2026 14:14

கெடுபிடிகள் இருந்தும் இவ்வளவு பணம் கொண்டு போகிறார்கள் என்றால் பிடிபடாதது எவ்வளவோ?


நிக்கோல்தாம்சன்
ஏப் 21, 2026 13:31

ஆத்தாடிஈ


duruvasar
ஏப் 21, 2026 12:54

திமுகாவில் எண்ணிலடங்கா அணிகள் உள்ளன . ஒரு அன்னியிடமே 2.5 கோடி இருந்தால் மொத்தமாக எவ்வளவு பணத்தை இறக்கியிருப்பானுங்கோ ?


V S Venkataramani
ஏப் 21, 2026 12:09

Tip of the iceberg


Mecca Shivan
ஏப் 21, 2026 12:03

பிடிச்சிட்டாலும் ..வழக்கு போட்டுட்டாலும் .. நைனார் இன்னிவரைக்கும் சிக்கலை


Rathna
ஏப் 21, 2026 11:54

போட்ட தார் ரோடு 3 மாசத்தில் கரைந்து போவதும், பாதாள சாக்கடை வீட்டுக்குள் வருவதும், ஆஸ்பத்திரியில் போலி மருந்துகளால் மக்கள் சாவதும் மூலம் வந்த பணம், மக்கள் வோட்டுக்கு லஞ்சமாக கொடுத்து கரைக்கப்படுகிறது. கொடுப்பதே இந்த அளவு பணம் என்றால் அவர்கள் கையிருப்பு எவ்வளவு இருக்கும்.


Sudha
ஏப் 21, 2026 11:53

தேர்தல் கமிசன் பறக்கும் படை அமலாக்க துறை மத்திய அரசு இத்தனை பேரையும் சமாளிக்கும் திராவிட சக்தி, வளர்த்து விட்டது யார்? டாஸ்மாக் என்ன கஞ்சா என்ன லாட்டரி என்ன, மெக்ஸிகோ வை மிஞ்சும் அநாகரிகம்


சிந்தனை
ஏப் 21, 2026 11:37

இதுபோன்று கண்துடைப்பு வேலைகளை செய்து சம்பளம் வாங்கி சாப்பிட தான் இந்த அரசு அதிகாரிகள் மக்கள் வரி ஊழியர்கள் கொள்ளையர்கள் சாகட்டும் நாசமாக போகட்டும் வயிறு எரிந்து சபிக்கிறோம்