/ செய்திகள் / சந்தீப் மிட்டல் விடுவிப்பு: மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ஆனார் டேவிட்சன் தேவாசீர்வாதம்

சந்தீப் மிட்டல் விடுவிப்பு: மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ஆனார் டேவிட்சன் தேவாசீர்வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்தது.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைமைச்செயலர், டிஜிபி, உள்துறை செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதில், அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தது.இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்துள்ளது. அவரை ஆயுதப்படை டிஜிபி ஆக நியமித்துள்ளது. இதனையடுத்து டேவிட்சன்தேவாசீர்வாதம் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக தொடர்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஏப் 12, 2026 16:21

என்னது லஞ்ச ஒழிப்பா? சீரியல் சிரிப்பு போலீஸ்.


Arul Narayanan
ஏப் 11, 2026 22:17

சந்தீப் மிட்டல் சுத்தமானவர் இல்லை என்றால் வேறு ஒருவரை கொண்டு வர வேண்டியது தானே? திரும்பவும் உபி ஒருவரையே ஏன் உட்கார்த்தி வைக்க வேண்டும்?


தமிழ்வேள்
ஏப் 11, 2026 21:29

தமிழகத்தில் நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் இருந்து விலக்கி வைக்கப்படுவதே நல்லது.அனைத்து நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுமே திமுக அடிமைகள்தான் சாதி & நாத்திக/ஆப்ரஹாமிய மத அடிப்படையில் கருணாநிதி கும்பலால் திட்டமிட்டு பதவிக்கு கொண்டு வரப்பட்டவர்கள்.. இவர்களை வைத்திருப்பது கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்திருப்பதற்கு சமம்..வேறு மாநில ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இங்கு தேவையானவர்கள்... தமிழக நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அல்ல..


K.n. Dhasarathan
ஏப் 11, 2026 21:16

தேர்தல் கமிஷன் இப்போது வாஷிங் மெஷின் ஆகிவிட்டதா ? எப்போது டேவிட்சன் புனிதம் ஆனார் ? செம கலாட்ட பண்றீங்கப்பா


Barakat Ali
ஏப் 11, 2026 21:01

சிறுபான்மை வாக்குகளை அள்ள மீண்டும் ஆசீர்வாதம் ..... பாசக்கவின் பரிந்துரையும் இருந்திருக்கும் .......


rajasekaran
ஏப் 11, 2026 20:43

இவங்க அடிக்கற கூத்துக்காகவே ADMK வரவேண்டும். மத்தியில் உள்ளவர்கள் DMK கு சொம்பு துகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள். செய்யது லூசா இருப்பாங்க போல.


hariharan
ஏப் 11, 2026 20:10

விளங்கிடும், central government is sleeping / & co with DMK. this person is already accused on passport case. still he is on posting. no idea either judiciary is live.


Raju
ஏப் 11, 2026 19:22

இதே மாதிரி சிட்டி போலீஸ் கமிசனரையும் திருப்பி பொட்டுடுங்கம்மா... உங்களுக்கு புண்ணியமா போகும்...இன்னும் 12 நாள் இருக்கு... பார்த்து பண்ணுங்க...நல்லா இருங்க


M Ramachandran
ஏப் 11, 2026 19:09

பொறுத்திருந்து பார்ப்போம்


GMM
ஏப் 11, 2026 18:39

திமுக மட்டும் புகார் கொடுக்க காரணம்? லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றம் தவிர, அரசு அதிகாரிகளை வழிக்கு கொண்டு வரும் துறை. தேர்தல் பணிகளில் ஊடுருவ முடியும். தேர்தல் ஆணையம் அவசர பட்டு, தவறான முடிவு எடுத்துள்ளது? தேர்தல் பணிக்கு வருவாய் துறை முக்கிய பங்கு. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனைத்து துறைகளில் இருந்து தேர்வு செய்ய படுவர். ஆனால், தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசனம் அமைப்பிற்கு அதிகார வரம்பு இல்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இலவசம் கொடுத்து வாக்கு பெறுவது சட்ட விரோதம் என்ற வழக்கு விசாரணைக்கு வந்தால், தேர்தலை நிறுத்த ஆணையம் மட்டும் தான் அதிகாரம் பெற்றது.