/ செய்திகள் / கூட்டம் குறைவால் ஸ்டாலின் ஷாக்

கூட்டம் குறைவால் ஸ்டாலின் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சில மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன. இதை எதிர்க்கட்சியினர், சமூக வலைதளங்க ளில் பரப்பி வருகின்றனர். இம்மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு, வேட்பாளர் அறிவிப்புக்கு பின் குறைந்துள்ளதாக, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனது மருமகன் சபரீசனை, ஸ்டாலின் களமிறக்கியுள்ளார். நேற்று முன்தினம் திருவள்ளூர் சென்ற சபரீசன், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார். கூட்டத்தை சேர்க்க, மாவட்ட நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தி.மு.க., மாவட்ட செயலர்களையும், 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களையும் எச்சரித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !