/ செய்திகள் / இன்றும் நாளையும் வீட்டிலேயே இருங்க!

இன்றும் நாளையும் வீட்டிலேயே இருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை ''கவனிக்க'' தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., வேட்பாளர்களால், தங்கள் தொகுதியில், 'பூத்' வாரியாக உள்ள மொத்த ஓட்டுகளில், 60 - 70 சதவீத வாக்காளர்களுக்கு சிறப்பு 'கவனிப்பு'க்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் பணப் பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு, சென்னையில் பிரசாரம் செய்தார். போலீசார் முழுவீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே, 'கவனிப்பு' நடக்கவில்லை. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில், 'கவனிப்பு' பணிகளை, அதிகாலை முதல் நண்பகல் வரை; மாலை முதல் நள்ளிரவு வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று துண்டறிக்கை வழங்கி, 'எங்கேயும் போய்டாதீங்க; கவனிப்புடன் வருகிறோம்' என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

PATTALI
ஏப் 20, 2026 16:03

பெண்களை பகடைக்காயாக வைத்து அரசியல் செய்து கோடிகோடியாக கொள்ளையடிக்கும் திராவிட சித்தாந்தத்தின் விளைவு இது. இதனால் பெண்களுக்கு பணம் கிடைத்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கையே மிஞ்சும் என்பதனை அனைவரும் உணரவேண்டும். மற்றவர்கள் சொல்வதை விடுங்கள், எங்கே சென்றது நம் ஒவொருவருக்கான பகுத்தறிவு?.


விஸ்வ நாதன்
ஏப் 20, 2026 14:55

பத்தாயிரம் கொடுத்தாலும் திமுகவுக்கு நான் ஓட்டு போடமாட்டேன்


பாரதி
ஏப் 20, 2026 14:42

நாட்டுக்கு அதிக பலன் கிடைக்கும்


பச்சையப்பன் கோபால்புரம் .தீமூக ஜெயிக்கட்டும் தள்ளபதி செழிக்கட்டும்.
ஏப் 20, 2026 13:26

தேர்தல் முடியவரைக்கும் நான் வீட்டிலதான் இருப்பேன்.எனிக்கி இதுவரைக்கும் அண்டாவும் கிடைக்கல வாக்காளர் உரிமைத் தொகையும் கிடைக்கல. என் பின்னாடி வீட்ட்டுக்காரனுக்கு எல்லாமே கெடைச்சிறுச்சு. என்ன தேர்தலோ என்ன கமிசனோ?


பாமரன்
ஏப் 20, 2026 10:03

வாக்காளர்களை கேவலமா நினைக்கும் இந்த மனநிலை இருக்கும் வரை தாமரை தமிழகத்தில் மலாறாது...


Svs Yaadum oore
ஏப் 20, 2026 12:36

தமிழ் நாடு படித்து முன்னேறிய விடியல் மாநிலம் ....அதெல்லாம் இங்கே காசு வாங்கி எவனும் வோட்டு போடுவது கிடையாது ......விடியல் காசு கொடுக்கிறார்கள் என்று சொல்லி தமிழ் மக்களை கேவலப்படுத்த கூடாது ...


ramesh
ஏப் 20, 2026 09:52

என்னமோ DMK மட்டும் தான் பணம் கொடுப்பதுபோல வந்து இருக்கிறது ADMK கூட்டணி காரர்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை . சாத்தான் குளம் இடை தேர்தலில் இருந்து தான் அளவுக்கு அதிகமான பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க பட்டது


RAVINDRAN.G
ஏப் 20, 2026 09:50

அதென்ன திமுக மட்டும் பணம் கொடுக்குறாங்கன்னு சொல்றீங்க. நாம் தமிழர், TVK தவிர எல்லா பெரிய கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அரசியலில் எல்லாருமே திருடங்கதான். அதில்தான் மொத்த அயோக்கியர்கள் இருக்கின்றனர். அதிலும் பெரிய கொள்ளைக்காரர்கள் திமுகவில் இருக்கின்றனர்.


V. Rajan
ஏப் 20, 2026 15:09

நாம் தமிழருக்கு வாங்கித்தான் பழக்கம்.


G Mahalingam
ஏப் 20, 2026 08:49

திமுக பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அது. கொள்ளை அடித்த லஞ்சம் பணம். வோட்டு திமுகவுக்கு போட. கூடாது.


முருகன்
ஏப் 20, 2026 08:47

அதிமுக பிஜேபி காசு கொடுக்காமல் இருப்பது மாதிரி ஒரு செய்தி அனைவரும் ஒரு குட்டையில் உரிய மட்டைகள் தான்


Sundar R
ஏப் 20, 2026 08:30

திமுகவினர் எவ்வளவு தவறான செயலைச் செய்ய முயற்சித்தாலும், காதில் பெருசா ஒரு செம்பருத்திப்பூ வைத்திருப்பவர்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். பகுத்தறிவால் பாதிக்கப்பட்டு LEFT HALF OF THE BRAIN. செயலிழந்து தடுமாறுபர்களில் சிலர் மட்டுமே திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். மடையர்களும், பைத்தியக்காரர்களும் கைதவறி கூட திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.