/ செய்திகள் / எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,

எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,

சென்னை: கர்நாடகா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., செய்தது போல், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக களமிறங்கியுள்ளது . முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், நேற்று பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். ஏற்கனவே, முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் மேலும் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வர வைத்து, த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அக்கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதி தான், மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மத்தியில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை பலமுறை கவிழ்த்து இருக்கிறது. கட்சி தாவல் தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான் கட்சி மாற முடியும் என்ற நிலை வந்தது. இதனால், எம்.எ ல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்கும் வழி தொடங்கியது. கடந்த 2019ல் கர்நாடகாவில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால், காங்., ஆதரவில் முதல்வராக இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இதுபோல, கடந்த 2020ல் ம.பி.,யில், 22 காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்ததால், கமல்நாத் தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டது. மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் செய்து வந்ததை, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க.,வும் தொடங்கி இருப்பது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Kancheepuram narasimhan
ஜூன் 19, 2026 08:39

படிப்பதற்கு மிகவும் சரியாகவே உள்ளது. ஆனால் சட்டப்படி இப்போது முடியாது. சட்ட திருத்தும் தேவை


JeevaKiran
ஜூன் 17, 2026 12:21

ஒரு MLA / MP ராஜினாமா செய்தால், அவனுக்கு அடுத்தபடியாக அதிக வோட்டு வாங்கியவனுக்கு MLA / MP பதவி தரப்படணும். மற்றும் ராஜினாமா செய்தவனுக்கு அடுத்த 5 வருட தேர்தல் வரும்வரை போட்டி இட தடை விதிக்கணும். செய்வார்களா? சட்ட சீர்திருத்தம்.?


Narayanan
மே 28, 2026 16:50

ஜோசப் விஜய் அவர்களது இனத்தவர் செய்யும் அதே வேலையைத்தான் செய்கிறார் .அடுத்த மதத்தவரை மதம் மாற்றி அவர்கள் மதத்தில் இணைப்பது மாதிரி அடுத்தவன் கட்சியை உடைத்து ஆள்பிடிக்கிறார் . அசிங்கமான அரசியல் நடந்தேறுகிறது


ManiK
மே 27, 2026 06:30

எதுக்கு பார்த்தாலும் பாஜக வை வம்பிழுக்காமல் பலரால் இருக்க முடியவில்லை. .. ஜோசப் விஜய் செல்லும் பாதை தேசியம் துறந்த-மறந்த பாதை. பாஜக செய்யாத பல அபாண்ட பழிகளை ஏற்க்கனவே சுமந்து செல்லும் போது மேலும் சுமையை சேர்க்க வேண்டுமா?!! :)


Svs Yaadum oore
மே 27, 2026 06:25

மத்தியில் இருக்கும் கட்சிகள் செய்து வந்ததை மாநிலத்தில் உள்ள லாட்டரி கட்சி செய்யுதாம் .....மத்தியில் உள்ள கட்சிகள் எல்லாம் படிக்காத வடக்கன் மாநிலம் ....தமிழ் நாடு படித்து முன்னேறிய ராமசாமி விடியல் மாநிலம்....விடியல் திராவிடனுங்க தமிழ் நாட்டை முன்னேறிய மாநிலமாக எப்போதோ மாற்றி விட்டார்கள் ...தமிழ் நாட்டை படித்து முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ....படிக்காத வடக்கனுங்க மாநிலத்தவுடன் ஒப்பிட கூடாது ...


Svs Yaadum oore
மே 27, 2026 06:22

எந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்ததோ தெரியவில்லை .....குதிரை பேரம் , விபரம் இல்லாத மந்திரிகள் , சுற்றி என்ன நடக்குது என்று புரியாத கோட்டு சூட் , ஆலோசகர் என்ற பெயரில் ஆந்திர சாராய அதிபர் , சீரழிந்த சட்டம் ஒழுங்கு .....இதில் லாட்டரி புகுந்து பல ஆயிரம் கோடிகள் சுருட்ட திட்டம் ...


Priyan Vadanad
மே 27, 2026 05:51

இன்னும் எத்தனை நாளுக்கு இந்த படம் ஒட்டப்படும்.? ரொம்பவும் போரடிக்குது,


Barathi
மே 27, 2026 05:46

எல்லோரும் சோவின் முஹம்மது பின் துக்ளக் padam பாருங்க. அவரு தனக்கு ஆதரவு தர்றவங்க எல்லோரையும் இலாகா இ‌ல்லாத மந்திரியா aakiduvaru. இப்ப நடக்கற கேளி கூத்தை 55 வருசத்துக்கு முன்னாடியே சொன்ன தீர்க்கதரிசி


Jayaraman
மே 27, 2026 05:42

ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ராஜினாமா செய்தால், அதே தொகுதியில் அவருக்கு அடுத்தபடியாக யார் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளார்களோ அவர்களை எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் நியமிக்க வேண்டும். எம் எல் ஏ அல்லது எம்பி இறந்தால் மட்டுமே அந்த இடத்திற்கு ஒரு வருடம் கழித்து தேர்தல் நடத்த வேண்டும். இப்படி செய்தால் தேர்தல் செலவு குறையும்.


Kasimani Baskaran
மே 27, 2026 01:28

திமுக அல்லது அவர்களின் தோழர்கள் மற்றும் அடியாட்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் கட்சி வெளங்காது என்பதை புரிந்தால் நல்லது.