எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
சென்னை: கர்நாடகா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., செய்தது போல், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக களமிறங்கியுள்ளது .
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், நேற்று பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். ஏற்கனவே, முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
அத்துடன் மேலும் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வர வைத்து, த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அக்கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதி தான், மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்தியில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை பலமுறை கவிழ்த்து இருக்கிறது. கட்சி தாவல் தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான் கட்சி மாற முடியும் என்ற நிலை வந்தது.
இதனால், எம்.எ ல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்கும் வழி தொடங்கியது. கடந்த 2019ல் கர்நாடகாவில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால், காங்., ஆதரவில் முதல்வராக இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
இதுபோல, கடந்த 2020ல் ம.பி.,யில், 22 காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்ததால், கமல்நாத் தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டது.
மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் செய்து வந்ததை, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க.,வும் தொடங்கி இருப்பது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
எதுக்கு பார்த்தாலும் பாஜக வை வம்பிழுக்காமல் பலரால் இருக்க முடியவில்லை. .. ஜோசப் விஜய் செல்லும் பாதை தேசியம் துறந்த-மறந்த பாதை. பாஜக செய்யாத பல அபாண்ட பழிகளை ஏற்க்கனவே சுமந்து செல்லும் போது மேலும் சுமையை சேர்க்க வேண்டுமா?!! :)
மத்தியில் இருக்கும் கட்சிகள் செய்து வந்ததை மாநிலத்தில் உள்ள லாட்டரி கட்சி செய்யுதாம் .....மத்தியில் உள்ள கட்சிகள் எல்லாம் படிக்காத வடக்கன் மாநிலம் ....தமிழ் நாடு படித்து முன்னேறிய ராமசாமி விடியல் மாநிலம்....விடியல் திராவிடனுங்க தமிழ் நாட்டை முன்னேறிய மாநிலமாக எப்போதோ மாற்றி விட்டார்கள் ...தமிழ் நாட்டை படித்து முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ....படிக்காத வடக்கனுங்க மாநிலத்தவுடன் ஒப்பிட கூடாது ...
எந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்ததோ தெரியவில்லை .....குதிரை பேரம் , விபரம் இல்லாத மந்திரிகள் , சுற்றி என்ன நடக்குது என்று புரியாத கோட்டு சூட் , ஆலோசகர் என்ற பெயரில் ஆந்திர சாராய அதிபர் , சீரழிந்த சட்டம் ஒழுங்கு .....இதில் லாட்டரி புகுந்து பல ஆயிரம் கோடிகள் சுருட்ட திட்டம் ...
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த படம் ஒட்டப்படும்.? ரொம்பவும் போரடிக்குது,
எல்லோரும் சோவின் முஹம்மது பின் துக்ளக் padam பாருங்க. அவரு தனக்கு ஆதரவு தர்றவங்க எல்லோரையும் இலாகா இல்லாத மந்திரியா aakiduvaru. இப்ப நடக்கற கேளி கூத்தை 55 வருசத்துக்கு முன்னாடியே சொன்ன தீர்க்கதரிசி
ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ராஜினாமா செய்தால், அதே தொகுதியில் அவருக்கு அடுத்தபடியாக யார் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளார்களோ அவர்களை எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் நியமிக்க வேண்டும். எம் எல் ஏ அல்லது எம்பி இறந்தால் மட்டுமே அந்த இடத்திற்கு ஒரு வருடம் கழித்து தேர்தல் நடத்த வேண்டும். இப்படி செய்தால் தேர்தல் செலவு குறையும்.
திமுக அல்லது அவர்களின் தோழர்கள் மற்றும் அடியாட்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் கட்சி வெளங்காது என்பதை புரிந்தால் நல்லது.
அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள், ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைவதில் தவறொன்றும் இல்லை. பா.ஜ.க செய்தால் சரி என்றால், திரு.விஜய் கட்சி அவ்வாறு செய்வதும் சரியே அதை விமர்சிப்பது சற்றும் நியாயமல்ல எனினும், தி.மு.க எம். எல்.ஏ.க்கள் சிலரையாவது, இது போல் ராஜினாமா செய்ய வைத்து, திரு.விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய செய்தால் தான், நடுநிலை சமன் ஆகும். இதில், மற்றொரு பெருத்த நன்மை உண்டு. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு, பயந்து கொண்டே, ஆட்சி நடத்த வேண்டிய தேவை வராது. ஏற்கனவே, கூட்டணி அரசியல் அழுத்தம் காரணமாக, இந்து அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட, திருமதி. ஸ்வர்ணா IAS அவர்களை, அவர் உயர்சாதியை சேர்ந்தவர் என்று, சாதியப்பாகுபாடு காட்டி, அவரது துறையை மாற்றியது போன்ற, சூழல் வருவதை தவிர்க்கலாம். கூட்டணியில் உள்ள சில கட்சியினரிடம், எங்கள் ஆட்சி விஷயத்தில், நீங்கள் உங்கள் சாதி சுவேஷத்தை காட்ட வேண்டாம் ஏனெனில், ஸ்ரீரங்கம் மற்றும் மயிலாப்பூரில், உயர் சாதியினர் விசிலுக்கு ஒட்டுப் போட்டுள்ளனர். உயர்சாதியினரில் பல பேர் எனது ரசிகராக இருக்கின்றனர். எனவே, நான் அனைவருக்குமான முதல்வராக இருக்க விரும்புகிறேன் என்று திரு.விஜய் துணிவாக கூறுவாரா என்பது தான் கேள்வி பொறுத்திருந்து பார்ப்போம்

ஜோசப் விஜய் அவர்களது இனத்தவர் செய்யும் அதே வேலையைத்தான் செய்கிறார் .அடுத்த மதத்தவரை மதம் மாற்றி அவர்கள் மதத்தில் இணைப்பது மாதிரி அடுத்தவன் கட்சியை உடைத்து ஆள்பிடிக்கிறார் . அசிங்கமான அரசியல் நடந்தேறுகிறது