விஜய்க்கு பாதுகாப்பு இல்லை: அமித்ஷாவுக்கு தவெக புகார் கடிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வில்லிவாக்கத்தில் நடந்த தவெக கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும்போது, பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில், உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டன. அயனாவரத்தைச் சேர்ந்த கலைவாணி, 45, என்பவரின் தொடையில் காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தோர் அலறியடித்து ஓடினர்.
மனு
தவெக பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளார். மனுவில், ''முதல்வர் ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரிலும், சென்னை போலீஸ் கமிஷனரின் உதவியுடனும், திமுகவைச் சார்ந்த சமூக விரோத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது.சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தலில் நீதி மற்றும் நியாயமான நடைமுறைகளை நிலைநாட்ட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விஜய் சேரும்கூட்டத்தினரை அவர்களாகவே ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கவேண்டும் . கூட்டத்திற்கென்று தடுப்புகளை திட்டமிட்டு அமைத்து கூட்டங்கள் நடத்திடவேண்டும் .நாம் தமிழர் கூட்டத்தை பார்த்து கற்றுக்கொண்டிருக்கவேண்டும்.
MGR தனக்கு வேண்டிய காவல் படையை தானே சம்பளம் கொடுத்து வைத்து கொண்டார் அரசை எதிர் பார்க்க வில்லை. உங்களுக்கெல்லாம் பந்தா தான் பெரிசு மக்கள் நலன் அல்ல. அரசியல் அ நா ஆ வனா தெரியாதவன் எல்லாம் பதவி பித்து பிடித்து அலையும் காலமிது. உண்மையான அரசியல் MGR ரோடு முடிந்து விட்டது.
சில சமயங்களில் பாஜக, திமுகவின் பி அணி என்று எனக்குத் தோன்றுகிறது. பாருங்கள், இன்று துரைமுருகன் ஊழல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு அதாவது, மக்களை கொள்ளைகள் அடிக்க திமுகவின் குண்டர்கள் எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள். விஜய் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
மற்ற கச்சி குண்டர்கள் பற்றி சொல்லாமல் விடுவது மாண்பு கிடையாது.. அவர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன ????
தமிழக வெற்றிக்கழக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கமுடியவில்லை என்றால் தேர்தலை 6 மாதத்திற்கு ஒத்திவைத்து ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நிர்வாகத்தை கொண்டுவந்து அதற்கப்பிறகுதேர்தலை நடத்துவதுதான் ஜனநாயகத்தின் சட்ட நடைமுறையாகும் .ஒரு கட்சியை பிரச்சாரம் செய்யவிடாமல் தேர்தலை நடத்துவது சரியான ஜனநாயக நடைமுறையாகாது .
You are correct.
முதலில் வேட்பு மனு ஏற்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும்
இந்நாட்டின் பிரதமரே ரோட் ஷோ என்று நாடு முழுக்க ஓய்வெடுக்காமல் செல்லுகிறார். அவரை விட அதிக பாதுகாப்பு விஜய் கேட்கிறார்
எந்த லெவலுக்கும் போக ரெடி. அறிவிலி விசை முதலில் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி வார்டு நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்கிறார்
பாதுகாப்பா பனையூரிலேயே இருந்தால் தமிழன் நிம்மதியா இருப்பான் …
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am