/ செய்திகள் / பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!

பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் இழுபறி நீடித்தது. ஒரு வழியாக வேட்பாளர்கள் பட்டியலை இன்று (ஏப்ரல் 03) பாஜ வெளியிட்டது.

பாஜ வேட்பாளர் பட்டியல் (27 தொகுதிகள்)

1.மயிலாப்பூர்- தமிழிசை2.தளி- நாகேஷ்குமார்3.மொடக்குறிச்சி- கிருத்திகா சிவக்குமார்4.ஊட்டி-போஜராஜன்5.அவிநாசி- எல்.முருகன் (மத்திய அமைச்சர்)6.திருப்பூர் தெற்கு- தங்க ராஜ்7.கோவை வடக்கு- வானதி சீனிவாசன்8.கந்தர்வக்கோட்டை- உதயகுமார்9.புதுக்கோட்டை- ராமசந்திரன்10.ராசிபுரம்- பிரேம் குமார்11.மதுரை தெற்கு- ராமசீனிவாசன்12.சாத்துார்- நயினார் நாகேந்திரன்13.திருச்செந்துார்- ராதாகிருஷ்ணன்14.வாசுதேவநல்லுார்- அனந்தன் அய்யாசாமி15.ராதாபுரம்- பாலகிருஷ்ணன்16.நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி17.விளவங்கோடு- விஜயதாரணி18.ஆவடி- ராஜசிம்மா மகேந்திரா19.திருவண்ணாமலை- ஏழுமலை20.தஞ்சாவூர்- முருகானந்தம்21.திருவாரூர்- கோவி சந்துரு22.அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்23.மானாமதுரை- பொன் பால கணபதி24.ராமநாதபுரம்- நாகேந்திரன்25.குளச்சல்- சிவக்குமார்26.பத்மநாபபுரம்- ரமேஷ்தென்னிந்திய பார்வர்டு கட்சியைச் சேர்ந்த திருமாறனுக்கு திருப்பத்தூர் தொகுதியை பாஜ ஒதுக்கி உள்ளது. பாஜ சின்னத்தில் அவர் போட்டியிட உள்ளார்.திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கராஜ், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன். ராசிபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரேம்குமார், பாஜ மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமியின் மகன்.ஊட்டி தொகுதியில் போட்டியிடும் போஜராஜன், கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கிருத்திகா சிவக்குமார், தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள்.

பெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு

தமிழக தேர்தலில் போட்டியிட பெண்கள் 5 பேருக்கு பாஜ வாய்ப்பு அளித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிட வில்லை.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 117 )

M Ramachandran
ஏப் 29, 2026 15:33

இடையில் மாட்டிக்கொண்ட சைமன்னும் அழுது கொண்டிருப்பதாக கேள்வி.


A Y MUTHUKUMAR
ஏப் 06, 2026 12:25

நான் பிஜேபி அனுதாபி...கட்சிக்காரன் அல்ல. ஆனால்‌ இந்த நாடினார், முருகன், வானதி, தமிழிசை...நான்கு துரோகிகளும் மண்ணைக் கவ்வ வேண்டும் என்று மனதார விரும்புகிறோம்.


Madras Madra
ஏப் 04, 2026 11:02

அண்ணாமலையை சட்டசபையில் எதிர் கொள்ள பயந்தே எல்லா பூமர்சும் கூட்டாக சேர்ந்து இப்டி பண்ணிட்டாங்க


Madras Madra
ஏப் 04, 2026 10:57

பாஜக இளமையாக சிந்திக்க வேண்டும் எதிர்காலம் அப்பத்தான் சரியாக இருக்கும் திரும்ப திரும்ப பூமர் தலைவர்களையே நிறுத்துவது புதிய இளைய தலைவர்களை அனுமதிப்பதில்லை என்றே தோன்றுகிறது


Madras Madra
ஏப் 04, 2026 10:47

பல இடங்களில் பாஜக க்கு டெபாசிட் பறி போகும்


SULLAN
ஏப் 07, 2026 15:34

அட ஆமாங்க


vivek
ஏப் 04, 2026 08:29

கட்சியை பெருசா வளர்த்தூட்டேன்னு அண்ணாமலை சொன்னது பெரிய உருட்டு, ஊரிலே இருந்த ரவுடிகளையெல்லாம் மிரட்டி நல்ல வசூல் பண்ணி பேருக்கு பதவியைக் கொடுத்தார் என்று அஅனைவருக்கும் தெரியும். பூத் லெவல் வரைக்கும் ஆள் போட்டாச்சின்னு சொன்னது முழுப் பொய்யின்னு கட்சி மேலிடத்துக்கு தெரிந்து கடுப்பானார்கள்.


jeyakumar
ஏப் 03, 2026 22:36

வெரி ஸ்ம்பிள், ஏற்கனவே தமிழக மக்கள் தொகையில் 58% பேர் திருட்டு மற்றும் ஏமாற்றி பிழைப்பவர்கள், ஆதலால் தான் நீ நல்லவனாக இருந்தால் ஜெயிப்பது கஷ்டம். ஏன் என்றால் இந்த திருட்டு புத்தி உள்ளவர்கள் திருடனை தான் தேர்ந்தெடுப்பார்கள். அண்ணாமலை போன்ற நல்லவர்களை அல்ல


vivek
ஏப் 04, 2026 08:16

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்


dandanakka
ஏப் 03, 2026 21:50

அண்ணாமலை இல்லாமல்......


கேடி ராகவன் ஐயங்கார்
ஏப் 03, 2026 21:00

இன்னொரு கஷ்டமான விஷயத்தை அண்ணாமலை கடக்கவேண்டும். இப்பொது போட்டியிடும் முக்கிய தலைகள் யார் தோற்றாலும் அண்ணாமலை தலையை உருட்டுவார்கள். ஜெயித்தால் அப்போதும் அண்ணாமலை தலை உருளும். நாங்களே ஜெயித்திட்டோம். அண்ணாமலை எதற்கு கட்சி கொடுக்கும் தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கவில்லை என்ற கேள்வியும் எழும். அப்போ அண்ணாமலை பயந்துவிட்டாரா என்ற அவப்பெயரை கட்சி ஆட்களே பரப்புவார்கள். இதைதான் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்று சொல்வார்கள்


கேடி ராகவன் ஐயங்கார்
ஏப் 03, 2026 20:57

இங்கு பலர் முருகன் ஜெயித்தால் அந்த ராஜ்யசபை சீட்டை அண்ணாமலை பெற்று மந்திரி ஆவார் என்று ஆர்வத்துடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதை முருகனும் விரும்பமாட்டார். அண்ணாமலையும் விரும்பமாட்டார். முருகன் காலி செய்த இடம் என்பது இரண்டாம் சாய்ஸ் . இரண்டாம் சாய்சா அண்ணாமலைக்கி ?? அதுஅவருடைய செல்வாக்குக்கு எத்தகைய இழுக்கு தெரியுமா ?? அண்ணாமலையை நன்கு அறிந்தவர்கள் இது போல எழுதி அண்ணாமலைக்கு கஷ்டத்தை தரமாட்டார்கள். அண்ணாமலை எப்போதும் தனி தேர்வை தான் விரும்புவார். இரண்டாம் நிலை தேர்வு அவருடைய திறமைக்கு மற்றும் செல்வாக்குக்கு மாபெரும் இழுக்கு ..அதுவும் வேறொரு மாநிலத்தில் இருந்து தேர்வு பெறுவதை எப்படி ஏற்பார் ?? அவருடைய அரசியல் CV சுத்தபத்தமாக தமிழகம் சார்ந்தே இருந்தால் தானே பிற்காலத்துக்கு உதவும் ? மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வானால் அதுவும் அவருக்கு இழுக்கு தானே ?? தமிழகத்தில் இருந்தோ இல்லை கர்நாடகத்தில் இருந்தோ தேர்வானாலாவது கொஞ்சம் கௌரவமாக இருக்கும். அப்புறம் அதிமுக்கியம் எல் முருகன் வெற்றி


K V Ramadoss
ஏப் 05, 2026 20:23

அண்ணாமலை தமிழகத்தில்தான் அரசாயலில் ஈடுபட விரும்புகிறார். இங்கு இருக்கும் ஊழல் அரசை அகற்றி ஊழலற்ற அரசை நிறுவ மிகவும் விரும்புகிறார். அது முடித்தபின்தான் மத்திய அரசுக்கு செல்வார். அதுவும் நிசசயம். எதிர்காலத்தில் இந்த நாட்டின் உயர்ந்த தலைவர் ஆவார் என்பதற்கான லக்ஷணங்கள் அவரிடம் இருக்கின்றன.