/ செய்திகள் / காய்க்கிற மரம்தான் கல்லடி படும்; செங்கோட்டையன் தத்துவ பேச்சு

காய்க்கிற மரம்தான் கல்லடி படும்; செங்கோட்டையன் தத்துவ பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோபி: ''காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி படும்,'' என்று, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.ஈரோடு மாவட்டம் கோபியில் பல்வேறு இடங்களில் , பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன்பேசியதாவது: நான் கடந்த, 1972ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். அ.தி.மு.க., என்ற இயக்கத்தில், 45 ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்தேன். அதற்கு பின் பல்வேறு சோதனை. கடுமையான வேதனைகளை எதிர்கொண்ட பின், த.வெ.க., தலைவர் என்னை தாங்கி பிடித்து, எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இடையியேதான் போட்டி.கோபியில் இபிஎஸ் என்னை குறிப்பிட்டு பேசியுள்ளார். அடுத்தவர் விமர்சனம் குறித்தெல்லாம் கவலைப்பட்டு அரசியலில் முடங்கிவிட முடியாது. அதனால், அது குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. ஆனால், இபிஎஸ்யின் விமர்சனங்கள் கடுமையாக இருப்பதாக, என்னிடம் சிலர் குறிப்பிட்டனர். மக்கள் என்னை நம்புகின்றனர். அவர்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உயிர் இருக்கும் வரை த.வெ.க.,வுக்காக பாடுபடுவேன். காய்க்கிற மரம் தான் கல்லடி படும். அதற்கேற்ப, இபிஎஸ் விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஏப் 20, 2026 11:26

ஜெயா இவருக்கு கல்தா கொடுத்த காரணம் அண்ணா கூறிய வழியில் otu மாற்றான் தோட்டத்து மல்லிகையை தேடிப்போனதுதான் என்கிறார்கள்.


sankaranarayanan
ஏப் 20, 2026 02:18

காய்க்கிற மரம் இல்லை நீங்க. பட்டுப்போன உலுத்துப்போன மரம் .எதற்குமே உதவாத மரம். போதுமா


Satish NMoorthy
ஏப் 20, 2026 02:04

Shameless politicians


Perumal Pillai
ஏப் 19, 2026 21:58

கருகிப்போன மரம் விறகுக்குத்தான் ஆகும் .


Seekayyes
ஏப் 19, 2026 21:31

அண்ணே உங்கக்கூடவே ஒரு அக்கா சுத்துதே, அது யாருண்ணே, சொந்தமாண்ணே?


Anantharaman Srinivasan
ஏப் 19, 2026 21:07

மேடையில் அநாகரிகமாக பேசினாலும் கல் வந்து விழும்.


Govi
ஏப் 19, 2026 20:49

தண்டம்


Sun
ஏப் 19, 2026 20:05

நேத்து எடப்பாடி போட்ட போட்டுல அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் தத்துவ மழை பொழிகிறார் மனுஷன்! அண்ணே எடப்பாடி உங்க விசயத்துல இது வரையிலுமே ரொம்ப அமைதியாகத்தானே இருந்தார். தேவையான்னே இது உங்களுக்கு!


Sun
ஏப் 19, 2026 19:50

நீங்கள் எடப்பாடி மீது தொடர்ந்து அவதூறு கல் எறிந்து வருவதும் அவர் காய்க்கிற மரம் என்பதால்தானா?


Ramesh Sargam
ஏப் 19, 2026 19:49

கனிகள் தொங்கும் மரத்தின் மீதுதான் கல்லெறியப்படும். மற்றவர்களைவிட இதை அதிகமாகவே அனுபவித்தவன் நான். அந்த மரத்திற்குத்தான் தேனீக்கள் வரும் பட்டாம்பூச்சிகள் வரும் பறவைகள் வரும் அணில்கள் வரும் குழந்தைகள் வரும் அந்த மரத்தைச் சுற்றித்தான் உயிர்ப்பு இருக்கும். அதற்காக மரம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமா என்ன? கல்லடி படக்கூடாது என்பதற்காகக் கனிகள் கொடுக்காமல் இருக்க முடியுமா? அது வாழ்க்கையின் பேரிழப்பாக ஆகிவிடும். கல்லடி படுவதைவிட, கனி சுமப்பதுதான் முக்கியமானது. கனியின் ருசியை அறிந்து கொண்டவர்கள் தானே, அக்கனிகளைத் தேடி வருகிறார்கள்? அதைத் தட்டிப் பறித்துவிட கற்களை வீசுகிறார்கள்? யாருக்கும் கொடுக்கப்படாமல் வீணாகிப் போகவா கனிகள் பிறந்தன? கனி சுமக்கும் மரம் கற்களை மட்டும்தான் சந்திக்கிறது என்று ஏன் தவறாக மதிப்பிட வேண்டும்? அந்த மரத்திற்குத்தான் தேனீக்கள் வரும் பட்டாம்பூச்சிகள் வரும் பறவைகள் வரும் அணில்கள் வரும் குழந்தைகள் வரும் அந்த மரத்தைச் சுற்றித்தான் உயிர்ப்பு இருக்கும். காய்ந்து வீணான மரமாக இருந்தால், அதைத் தேடி யார் வரப் போகிறார்கள்? கனி கொடுக்காத மரம் கற்களை சந்திக்காது கோடலியை சந்திக்கும். ஆம்... பயனற்றுப் போனால், மொத்தமாக வெட்டுப்பட்டு சரியும்.


அழகர்சாமி
ஏப் 19, 2026 21:51

விளக்க........


SANKAR
ஏப் 20, 2026 00:09

poetry in prose.congrats