/ செய்திகள் / 2 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000; தலைமை உத்தரவால் பணம் பட்டுவாடா

2 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000; தலைமை உத்தரவால் பணம் பட்டுவாடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., மூத்த தலைவர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க.,வின் மூத்த தலைவருக்கு, வயதை காரணம் காட்டி 'சீட்' கொடுக்க, தலைமை மறுத்தது. ஆனால், அவர் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி 'சீட்' வழங்கியது. தேர்தலில் களத்தில் இறங்கியவர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு செலவு செய்ய, தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த கட்சி தலைமை, தொகுதியில் வெற்றி பெற வேண்டுமெனில், கட்சியினரையும் வாக்காளர்களையும் பாரபட்சமின்றி கவனிக்குமாறு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தொகுதியில் 2 லட்சம் பேருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யும் பணியில், அந்த மூத்த தலைவரின் ஆதரவாளர்கள், நேற்றுமுன்தினம் இரவு முதல் களம் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Seekayyes
ஏப் 21, 2026 12:46

தலா ரூ2000, 2 லட்சம் பேருக்கு என்றால் ரூ 40 கோடி. ஒரு சீட்டுக்கு செலவு என்றால், 234 தொகுதிக்கு? சரி சராசரி 50,000 பேருக்கு ரு2000 என்று வைத்து கொள்வோம், 234 தொகுதிக்கு தீயமுக செலவு செய்வது ₹ 2,340 கோடி.


Barakat Ali
ஏப் 21, 2026 09:44

மினிமமே 2000 .... ஆனா எங்களுக்கு மட்டும் கருத்துப்போட அப்பலேர்ந்து 200 மட்டுமே .... ஒரு ஊ பீயின் புலம்பல் .......


aru
ஏப் 21, 2026 08:44

தீயசக்தியும் கூட்டனிகளும் ஐந்து வருடமாக டாஸ்மாக்கில் குடித்து செய்யாத குற்றங்கள் அளவிடமுடியது, போதையினால் பள்ளி, கல்லுரி,கிராமஙக்கள் வரை விற்று கொலை,கொள்ளை,தலைமுறை தடுமாறி போகிறது, பெண்கள்,குழந்தைகள் ,பயமில்லாத சார்கள் மூலம் அச்சத்தில் வாழ்கிறார்கள்,வரி, ஏற்றத வரி எதாவது உண்டா, பால் விலையிலிருந்த தினசரி பொருட்கள் கடும் விலையேற்றம், வேலை வாய்ப்பு இல்லை, விவசாயம் படுக்க வைத்துவிட்ட இவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி , அதிமுக + தேச நலன் காக்கும் பாஜக கூட்டனி வெற்றி பெற வாக்கு செலுத்தும் நாள் 23 ஏப்ரல் வியாழக்கிழமை.


S.V.Srinivasan
ஏப் 21, 2026 08:24

திராவிட மாடல் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கோங்க, ஆனா அவங்களுக்கு வாக்களிக்காதீங்க. அவங்க பாக்கெட்லேர்ந்தா கொடுக்குறாங்க. உங்க பணத்தை திருப்பி உங்களுக்கே கொடுக்குறாங்க.


V RAMASWAMY
ஏப் 21, 2026 08:13

இவ்வளவு வெளிப்படையாக எழுத்து மூலம் மீடியாவில் குற்றங்கள் வெளிப்படும்போது தேர்தல் கமிஷன் ஏன் உடடனடி நடவடிக்கை எடுக்காமல் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை paarkkirathu?


S.V.Srinivasan
ஏப் 21, 2026 08:27

தேர்தல் கமிஷன்க்கே கமிஷன் கொடுக்கும் தில்லாலங்கடி திராவிட மாடல். அதனால தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க.


Mecca Shivan
ஏப் 21, 2026 12:01

தேர்தல் கமிஷன்


இரஞ்சி
ஏப் 21, 2026 07:23

இதுவே நாற்பது கோடி மற்ற வகையரா வகையரா அறுபது கோடி. மொத்தம் ரூபாய் நூறு கோடி. இனி இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் பழைய மலைகளின் கணக்கா இல்லை புதிய பல மனைகள் காணாமல் போகுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.


சூர்யா
ஏப் 21, 2026 07:21

இப்படி ஒரு சம்பவம் நடப்பது உண்மையானால் அத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பணம் கொடுத்த வேட்பாளரை மீண்டும் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது ரெண்டுமே நடக்காது. இருந்தாலும் நம்ம கருத்த சொல்லுவோம்.


venugopal s
ஏப் 21, 2026 12:10

இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் தானே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பார்கள்!


Unmaisudum
ஏப் 21, 2026 13:40

பணம் கொடுத்ததுக்கு ஆதாரம் நிறைய இருக்கு, ஆனால் பாவம் பலர் இங்கே வந்து வெத்து வெடி போட்டுக்கிட்டு


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2026 07:06

தேர்தல் கமிஷன் போர்வையில் இருக்கும் ஜாக்ட்டோ அங்கத்தினர் இச் செயலைப் பார்த்து அமைதியடையவும்