2 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000; தலைமை உத்தரவால் பணம் பட்டுவாடா
சென்னை: தி.மு.க., மூத்த தலைவர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வின் மூத்த தலைவருக்கு, வயதை காரணம் காட்டி 'சீட்' கொடுக்க, தலைமை மறுத்தது. ஆனால், அவர் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி 'சீட்' வழங்கியது.
தேர்தலில் களத்தில் இறங்கியவர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு செலவு செய்ய, தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த கட்சி தலைமை, தொகுதியில் வெற்றி பெற வேண்டுமெனில், கட்சியினரையும் வாக்காளர்களையும் பாரபட்சமின்றி கவனிக்குமாறு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, தொகுதியில் 2 லட்சம் பேருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யும் பணியில், அந்த மூத்த தலைவரின் ஆதரவாளர்கள், நேற்றுமுன்தினம் இரவு முதல் களம் இறங்கி உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்