/ செய்திகள் /  மே 4ல் தமிழகத்தில் விசில் புரட்சி

 மே 4ல் தமிழகத்தில் விசில் புரட்சி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தொலைநோக்கு சிந்தனையுடன் திகழ்கிறார்.நாளைய தமிழகத்தை ஆட்சி செய்யும் ஆளுமை எங்கள் தலைவருக்கே உள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும், ஒருமனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம், எல்லோர் மனதிலும் உள்ளது. உலக அளவில் இதுவரை பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, சோசலிச புரட்சி நிகழ்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் வரும் மே 4ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் 'விசில் புரட்சி' தான் நிகழும். சட்டசபை தேர்தலில், நாங்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும், த.வெ.க.,வின் வெற்றியைத் தடுக்க முடியாது. - செங்கோட்டையன், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மணியன்
ஏப் 29, 2026 09:16

இப்படி ஒரு இழிநிலை செங்கோட்டையனுக்கு அவசியமா


விஸ்வ நாதன்
ஏப் 29, 2026 08:43

234ல் வெற்றி பெறும் விசில் ஹிஹி