/ செய்திகள் / மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது
மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.,23ம் தேதியும், இரண்டாம் கட்டமாக இன்று 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. இங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களத்தில் உள்ளன.கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி
கேரளாாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சி அமைக்க 71 தொகுதிகள் தேவை. ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜ ஆகியவை போட்டியிட்டன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க இடதுசாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது. பாஜவும் தீவிர தேர்தல் பணியாற்றியது.அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி
அசாமில் மொத்தம் 126 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ஆட்சி அமைக்க 64 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைக்க பாஜ தீவிரம் காட்டி வந்தது. காங்கிரசும் போராடி வந்தது.புதுச்சேரியில் பாஜ கூட்டணி
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஏப்.,09ம் தேதி தேர்தல் நடந்தது. இங்கு என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக ஆகியவை ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஆகியவை தனி அணியாகவும் போட்டியிட்டன. ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am