/ நொறுக்கு தீனி / ராஜினாமா ஏன்?
ராஜினாமா ஏன்?
கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த காங்., பிரமுகர், சூரியனை விட்டு கை விலகவில்லை என்றதும் நொந்து போய்விட்டாராம். கட்சியின் டில்லி பிரதிநிதிகள் சிலரை சந்தித்த போது, இது குறித்து முறையிட்டு மனக்குமுறலை வெளிப்படுத்தினாராம். 'அரசியல்ல இதெல்லாம் சகஜம்' என்று எல்லோரும் சொல்லிவிட, மேலும் நொந்து போய், வேறு வழியின்றி தனக்கான தேர்தல் பணியை ராஜினாமா செய்தாராம்.