திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: டுடேஸ் சாணக்யா சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மற்றொரு கருத்துக்கணிப்பு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நிறுவனம் தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திமுக கூட்டணி : 114 - 136அதிமுக கூட்டணி: 34-56தவெக : 52-74மற்ற கட்சிகள்: 0-2மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரள மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.மேற்கு வங்கம்பாஜ : 181-203திரிணமுல்: 89- 111மற்றவர்கள்:0-2அசாம்பாஜ: 93-111காங்கிரஸ்:13-42மற்றவை: 0-2கேரளாகாங்கிரஸ் கூட்டணி: 60 -78இடதுசாரி கூட்டணி: 55-73பாஜ :3-11மற்றவை:0-1
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 36 )
எண்ணி சொல்லபோகுது தேர்தல் கமிஷன். மக்கள் இதை படித்துக்கொண்டு எதுவும் செய்யாமால் காத்து கொண்டா இருக்கிறாரகள். உணவுக்கு தினமும் 1000 தேவை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். மற்றவர்கள் உணரும் நல்ல வரவே வராது
தேர்தலில் பலவிதமான புளுகுகளை பார்த்து விட்டோம். ஒரு 3 நாட்களில் தெரிந்துவிடும் விசயத்தில் ஏன் இத்தனை குழப்பம்.
அடேங்கப்பா நம்பில் துண்டுசீட்டு கோமாளி தாத்தாவின் புது செட்டப்பு கருத்து கணிப்பா இருக்கே கோமாளி நைனா மே 4 வரை பொறுத்திருப்பா
திமுக ஒவ்வொரு முறையும் 35%-40% சதவீத ஓட்டுகள் பெறுகிறது. அதாவது 65%-60% மக்கள் திமுக வேண்டாம் என்று சொல்பவர்கள். இது கண்கூடாகத் தெரிந்தும், ஈரணி தேர்தல் வியூகம் அமைக்கத் தெரியாத எதிர்க்கட்சிகளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
இது தான் மிகச் சரியான கருத்து இது தெரியாமல் போனதால்தான் பத்து தோல்வி பழனி போன முறையும் தோற்றார் இப்போதும் வெற்றிகரமாக தோற்கப்போகிறார் இனியும் தோற்பார்
மத்தியில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? பாஜகவும் இதுவரை மூன்று முறையும் நாற்பது சதவீத ஓட்டுக்கள் கூடப் பெறாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தான் ஆட்சியைப் பிடிக்கின்றனர்.
திமுக விற்கு என்னதான் சாதகமான தீர்ப்புக்கள் வெளிவந்தாலும் திமுக காரன் இனிமேல் திருந்தப் போவதில்லை. ஒருவேளை வெற்றி பெற்றாலும் இதையே மக்கள் அவர்களுக்கு கொடுத்த கடைசி அதிர்ச்சி வாய்ப்பென்றென்னி அவர்கள் இனிமேல் மாறுவது நல்லது.
dmk இன்னும் திங்கட்கிழமை வரை இவனுங்க கை கூலிகள் பல விதமான கருது கணிப்புகள் அள்ளி விடுவானுவ. யார் கண்டா அதிமுக 0 என்று கூட கருது கணிப்பு வரலாம். ஏன் என்றல் திங்கட்கிழமை தோற்றுவிட்டால் இதையே காரணத்தை கட்டி எலக்ஷன் கமீஸின் எங்களை ஏமாத்திட்டானுங்கனு கதை கட்டலாம் இதுதான் உங்க பிளான். உங்க பிளான் போலவே நடக்கும்
செல்லாது செல்லாது இந்த கள்ள ஆட்டம். இந்த முறை திமுக வெற்றி பெறும் என்றால் ஒரே ஒரு விஷயம் செய்து இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அது கள்ள ஓட்டு போட்டு இருக்க வேண்டும் தேர்தல் நேர்த்தில், இல்லை என்றால் தேர்தல் முடித்த பின்னர், சீல் வைத்த உடைத்து மீண்டும் ஓட் போட்டு இருக்கலாம். இதை வைத்து மட்டுமே இவர்களால் வெற்றி பெற முடியும்.
"கள்ள ஓட்டு" ? ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்றாளாம் LoL
Azhiya pogirathu tamizhagam…..
சீமனுக்கும் ஜோசேப்புக்கும் போடும் ஒட்டு ஸ்டாலினுக்கு போடும் ஒட்டு. எதிர்க்கட்சி ஓட்டுகள் பிரிந்துவிட்டதால், ஸ்டாலின் வெற்றிவாய்ப்பை எண்ணுகிறார். இது நடக்க வாய்ப்பில்லை.
திமுகவுக்கு மூன்றாமிடம்தான்.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am