அ.தி.மு.க., ஆதரவை பெற பழனிசாமியுடன் த.வெ.க., பேச்சு?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அ.தி.மு.க., ஆதரவுடன் ஆட்சி அமைக்க, பழனிசாமியுடன், தமிழக வெற்றிக் கழகம் பேச்சு நடத்துவதாக அ.தி.மு.க., சார்பில் வென்ற லீமா ரோஸ் தெரிவித்தார். அ.தி.மு.க., சார்பில், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற, லாட்டரி அதிபரின் மனைவி லீமாரோஸ், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின், அவர் கூறுகையில், ''ஆட்சி அமைப்பது தொடர்பாக, பழனிசாமியுடன் த.வெ.க., பேச்சு நடத்துகிறது. பேச்சு நல்லபடியாக முடியும் என நினைக்கிறேன். பழனிசாமி அண்ணனின் ஆட்சிதான் அமையும்,'' என்றார். இதற்கிடையே, த.வெ.க.,வுடன் பேச்சு எதுவும் நடக்கவில்லை எனவும் த.வெ.க.,வுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்காது எனவும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணியன் நேற்று தெரிவித்தார். பழனிசாமியை சந்தித்த பின், இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திமுக வுக்கு எதிர் வாக்குகள் tvk வுக்கும் admk க்கும் போட்டிருக்கிறார்கள் எனவே tvk admk கூட்டணி ஆட்சி இருவருக்கும் நல்லது
அடியேன் விரும்புவது. நீ ஒஸ்தி நான் ஒஸ்தி யெல்லாம் வேணாம். திருட்டு தீயமுக வை வேரோடு பிடுங்கி எறியணும்.அதுக்கு எடப்பாடி ஓகே சொல்லணும். ஏற்கனவே அண்ணாமலை முன் சண்டித்தனம் பண்ணியதால் உங்க ஓட்டு விஜய்க்கு போச்சு. மீண்டு வரும் வழியை பாருங்க. விஜய்க்கு உங்க ஆதரவை குடுங்க. ஏற்கனவே லால்குடி லீமா ரோஸ் சொல்லியிருக்கு. அதன் படி முடிச்சிடுங்க. வாழ்த்துக்கள்.
எதற்காக எட்டப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இன்னும் சிறிது நாட்களில் தங்கமணி தலைமையில் அண்ணா திமுக உடைந்து தங்கமணி குரூப் த வெ க வில் இணைந்து விடும்
தங்கமணி ஜெயிக்கவே இல்லை
திருட்டு திமுகவை அடித்து துரத்த வேண்டும் என்றால் அதிமுக த வெ க வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் கொள்ளை அடித்ததை மக்கள் மன்றத்தில் வெளிக்கொணர்ந்து தண்டனை வாங்கி தர வேண்டும் முக்கியமாக ஸ்டாலின் உதயநிதி மருமகன் சபரிசன் இவர்களின் கொள்ளை அடித்த கோடிகளை மீண்டும் கஜானாவில் சேர்க்க வேண்டும்...
ராஜாவுக்கு அப்ளாஸ்.
இபிஸ் கூட்டணியும், திமுகவோடு இருக்கும் உதிரிக் கட்சிகளின் கூட்டணியும் தேவையற்ற குடைச்சலைத் தரும். செங்கோட்டையன் மூலம் அ இ அ தி மு க கோட்டையை உடைத்து ஒரு 20 சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது எளிது. ஆளுநர் வழங்கும் காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.இ பி எஸ் தலைமை எப்படியும் சசிகலா கூட்டத்தால் பறிக்கப்படும். கட்சித்தாவல் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதியிழப்பு அபாயம் இன்றி தங்கள் கட்சியை மாற்றிக்கொள்ளலாம். ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பேர் அந்த இணைப்புக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில், அக்கட்சி மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இணைய முடிவு செய்யும் உறுப்பினர்களோ அல்லது அசல் கட்சியிலேயே தொடரும் உறுப்பினர்களோ தகுதியிழப்பை எதிர்கொள்ள மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு த வெ க உடன் இணைந்து கூட்டணி மந்திரி சபை அமைப்பது தமிழ் நாட்டிற்கு நல்லது
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am