Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்

 ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்

தமிழகத்தில், ஜாதியால் பிறந்து, சிந்தித்து, வாழ்ந்து, மடியும் சமூக கட்டமைப்பு உள்ளது. இதில் வசமாக சிக்கி கிடக்கிறோம். ஜாதியை மறுத்து, பாட்டாளி வர்க்கமாக வாழ முயன்றாலும் அனைவரும் ஒருங்கிணைய முடியவில்லை. தமிழகத்தில் ஜாதிய ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய் ஆட்டிப்படைக்கிறது. ஜாதி பெயரை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அப்படித்தான் சமூக அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

புரட்சிகரமாக பேசி எழுதினாலும், குடும்பத்தில் கூட மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலையை வலதுசாரிகள் கண்டிப்பதில்லை. ஜாதியத்தை தகர்க்கும் அறிவாயுதம், பேராயுதம் அரசியலமைப்பு சட்டம் தான். இன்றைய இளைஞர்களிடம், மாறுபட்ட முற்போக்கு சிந்தனையை வளர்க்க வேண்டும்.

- திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

Advertisement