Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மதுரை மத்தியில் கடும் போட்டி நடிகை குஷ்பு கணவர் கணிப்பு

 மதுரை மத்தியில் கடும் போட்டி நடிகை குஷ்பு கணவர் கணிப்பு

மதுரை: தே.ஜ., கூட்டணியில், புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்தி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில், புதிய நீதி கட்சியின் வேட்பாளராக நடிகை குஷ்புவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று அவர் மதுரை வந்தார். உடன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இருந்தார்.

சுந்தர்.சி அளித்த பேட்டி:

இந்தக் களம் எனக்கு ரொம்ப புதுசு. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, இன்று பழனிசாமியால் ஆதரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் கோட்டை மதுரை.

மதுரை மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. மதுரை மத்தி, தி.மு.க.,வின் பலம் வாய்ந்த தொகுதி; அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார்.

எனவே, போட்டி கடினமாகத்தான் இருக்கும்; போட்டியை பார்த்து ஒதுங்கிப் போக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ஏப் 02, 2026 07:47 pm

மூர்த்தி உள்ளடி வேலை பார்த்து உங்களுக்கு உதவுவார்.

Reply Rate this
ஏப் 02, 2026 02:27 am

தோற்றாலும் தோற்று விடுவேன் இருந்தாலும் போட்டியிலிருந்து ஒதுங்கி கொள்ளவிரும்பவில்லை என்பது பெருந்தன்மை தான்.

Reply Rate this