Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

 வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை : 'வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை, பிரதமர் மோடி எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவு என்ற பெயரில், பா.ஜ., அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள், முழுக்க முழுக்க கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல்.

ஏற்கனவே வக்பு வாரிய சட்ட திருத்தம் வாயிலாக இஸ்லாமிய சொத்துக்களை கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மத சிறுபான்மையின அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ., அரசு இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தேர்தல் நடக்க இருப்பதாலும், இப்போதைக்கு பின்வாங்குவது போல் நடித்து, விரைவில் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ., அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
இந்த முயற்சிகளை கைவிட்டு, பிரதமர் மோடி இந்த தன்னிச்சையான அநியாய சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்தும், ''சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை முடக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.


மதத்தை குறிவைத்து கொண்டு வரப்படவில்லை
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டம் முதலில் உருவாக்கப்பட்டதே, வெளிநாட்டு நிதி வரைவுகளை கட்டுப்படுத்தவும், அவை பயங்கரவாத நிதியுதவி, சட்ட விரோத மதமாற்ற செயல்கள் மற்றும் நாட்டின் சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தான்.
குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சவால்கள், போதைப்பொருள் ஊடுருவல் போன்ற விஷயங்கள் குறித்து அதிக கவலை நிலவுகின்ற சூழலில், இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியமானவை. இத்திருத்தம் எந்த மதத்தையோ, சமூகத்தையோ குறிவைத்து கொண்டு வரப்படவில்லை. யாரும் தலைப்புகளை மட்டும் பார்த்து கருத்து உருவாக்கக்கூடாது.
- எஸ்.சுந்தர்ராமன், தலைவர், தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் அணி

Advertisement

ஏப் 03, 2026 02:55 pm

ஏழை அமைச்சர்கள் வேலு , சைதாப்பேட்டை பாலு , பாலாஜி ,வேலூர் துரைமுருகன் ,திருச்சி நேரு , பெரம்பூர் சேகர் பாபு , இவர்கள் எல்லோரும் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை வழி மொழிகிறார்கள் , எப்படிப்பட்ட சுய நலம் கொண்ட கொள்ளை கூட்டம் இறைவா

Reply Rate this
ஏப் 03, 2026 01:46 pm

ஸ்டாலின், மத்திய அரசின் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார் என்றாலே, அந்த சட்டம் கண்டிப்பாக நல்ல சட்டமாகத்தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். எனவே இது தேவையான நல்ல சட்டமே. மத ரீதியாக, நம் பாரதத் திருநாட்டை அடிமை கொள்ள நினைக்கும் வெளி நாட்டு சக்திகளின் சதியை முறியடிக்கவும், தீவிரவாத செயல்களை வேரறுக்கவும் இந்த சட்டம் இன்றியமையாதது.

Reply Rate this
ஏப் 03, 2026 12:53 pm

தீவிரவாதத்தை ஓடுக்கவும் மதமாற்றத்திற்கு தடை செய்யவும் எதிரிநாடுகளின் சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமே சட்ட திருத்தும் செய்யப்பட்டிருக்கிறது. திமுக காங்கிரஸ் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள் வெளிநாட்டு பணத்தை வைத்துக்கொண்டு நம் நாட்டிற்கு எதிரான காரியங்களுக்கு பயன்பாடுத்துகின்றனர்.

Reply Rate this
ஏப் 03, 2026 12:25 pm

வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம் மிகவும் அவசியமான ஒன்று . மதமாற்றம் செய்ய இந்த வெளிநாட்டு பணம் பயன்படுகிறது . பணம் இல்லை என்றால் இது நடக்க சாத்தியமில்லை . ஒன்று செய்யுங்கள் ஸ்டாலின் உங்கள்மதத்திற்கு உங்கள் சொந்த நிதியில் இருந்து வாரிவழங்குங்கள். உங்கள் புத்திரனும் அதே இனம்தான் . அவனும் வாரிவழங்கலாமே . ஹிந்துக்கள் துயிலெழவேண்டும் . அவன் கொடுக்கும் ஆயிரங்களுக்கு அடிமையாகாதீர்கள் .

Reply Rate this
ஏப் 03, 2026 11:35 am

இந்த நிதி ஒன்று பாவ மன்னிப்பு அரசாங்கங்களில் இருந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகள். இவர்கள் ஏழைகளை போலி மதமாற்றம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை, மதம் என்ற போன்றவையில் பிடுங்கவும், நாட்டின் வடகிழக்கு பகுதியை அமெரிக்காவின் துணையுடன் பிரிக்கவும், இந்தியாவில் ஒரு கிறிஸ்துவ நாட்டை அமைக்கவும், அமெரிக்கா, ஐரோப்பா ஆதரவு மற்றும் ருசியா எதிர்ப்பு திட்டத்தை செயல்படுத்தவும், அரசாங்கத்தின் மக்கள் நன்மைக்கான திட்டங்களை NGO மூலம் எதிர்க்கவும் பணம் வருகிறது. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லிட் தொழில் சாலையை மூடியது இந்த மாதிரி நிதியால் நடந்து, வேலை வாய்ப்பை பிடுங்கி, மக்களை ஏழ்மையில் தள்ள அமெரிக்கா நிதி பயன்பட்டது.

இரண்டாவது துபாய், கத்தார், பஹ்ரைன், பாக்கிஸ்தான், சவூதி, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவை 2047க்குள் அமைதி வழி மர்ம நாடுகளாக மாற்ற வருகிறது. இது பெரும்பாலும் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கவும், நாட்டில் குண்டு வைக்கவும், நாட்டில் உளவு பார்க்கவும், உள்நாட்டு மர்ம நபர்களின் கேஸ்களை கோர்ட்டில் வாதாடவும், தீவிரவாதிகளுக்கு சிறையில் நிதி உதவி வழங்கவும், இந்தியாவில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவும் வருகிறது.

நேற்று வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக பெரிய வன்முறை நடந்து உள்ளது. இதை நடத்தியது பங்களாதேஷிகள். இந்த மாதிரி செய்லகளை ஊக்குவித்து நாட்டை பிரிக்க அரசியல்வாதிகள் மிக பெரிய திட்டம் போடுவது தெரிகிறது.

Reply Rate this
Ramakrishnan R - Johilpatti
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகச் சரியானவை. ஜெய் ஹிந்த்
ஏப் 03, 2026 01:50 pm
Rate this
ஏப் 03, 2026 11:35 am

ஜோசப் விஜய் மீதான பயம் வெளிப்படுகிறது.

Reply Rate this
ஏப் 03, 2026 11:30 am

கோவை குண்டுவெடிப்பில் ஈடுபட்டு சிறையிலிருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவிநிதி என வளைகுடா நாடுகளிலிருந்து அன்னியச் செலாவணி விதிகளை மீறி நிதி வசூலித்து இங்கு கொண்டு வந்தார்கள். இதுபோல உதவுவது மற்ற பல இளைஞர்களையும் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஊக்கமளிக்காதா? மேற்கண்ட வழக்கில் ஓராண்டு சிறைதண்டனை பெற்ற ஜவாஹிருல்லாவுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

Reply Rate this
ஏப் 03, 2026 10:45 am

இவர் தய்யா தக்கா என குதிப்பதை வைத்து பார்த்தால் அந்த சட்ட திருத்தம் நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல சட்டம் என புரிந்துக்கொள்ளலாம்.

Reply Rate this
ஏப் 03, 2026 09:28 am

கோழி கூவி பொழுது விடியாது

Reply Rate this
ஏப் 03, 2026 09:27 am

இவருக்கு எங்க எரியுது இவர் கிட்டேயும் வெளிநாட்டு நிதி இருக்குறதாலயா இவர எல்லாம் பிடிச்சு உள்ள தள்ளாம ஏன் வேடிக்கை பாக்குது மத்தியம்

Reply Rate this