அதிமுக கூட்டணி வென்றால் பாஜ முதல்வர் வந்து விடுவார் : சொல்கிறார் கெஜ்ரிவால்
சென்னை : ''அதிமுக கூட்டணி வென்றால், பாஜ முதல்வர் வந்து விடுவார்,'' என, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சென்னை வந்துள்ள அவர் அளித்த பேட்டி:திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, சென்னை வந்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு கால திமுக, ஆட்சியில், தமிழகம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள், இந்தியா முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரசாரத்தின்போது, தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழக மக்கள், பாஜ மீது வெறுப்புடன் உள்ளனர். அதனால், அதிமுக வழியாக தமிழகத்திற்குள் பாஜ நுழையப் பார்க்கிறது. தமிழக மக்கள் நிச்சயம் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். அதிமுக கூட்டணி வென்றால், பீஹாரைப் போல, தமிழகத்திலும் பாஜவைச் சேர்ந்தவர் முதல்வராகி விடுவார்.
திமுக அரசை, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜவினர் குறை கூறுகின்றனர். பாஜ ஆளும் மாநிலங்களில் மோசமான ஆட்சி நடக்கிறது; முதலில் அதை சரி செய்யட்டும். முதல்வர் ஸ்டாலின் மீது, தமிழக மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.
கடந்த 2021ல் பெற்றதை விட, அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும். 'இரட்டை இன்ஜின் அரசு' என, பிரதமர் மோடி பேசுகிறார். இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கும் பாஜ ஆளும் மாநிலங்களில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். தமிழக சட்டசபை தேர்தலில், விஜயின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என, நான் நினைக்கவில்லை. 'இண்டி' கூட்டணியில் நான் இல்லை. ஆனாலும், தமிழகத்தில் திமுகவுக்காக, வரும் காலங்களிலும் பிரசாரம் செய்வேன்.
தமிழகத்தில் பாஜ இடம்பெறும் கூட்டணி வென்றால், மக்கள் நலத் திட்டங்களை முடக்கி விடுவர். பாஜவின் பிடியில் அதிமுக உள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
Advertisement
பாஜகவினர் பீகாரில் செய்தது போல் பின் வாசல் வழியாக நுழைவதில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே!
அர்விந்த் கெஜ்ரிவாலின் இந்தக் கருத்து அ.தி.மு.க, பா.ஜ.க காரர்களை உற்சாகப் படுத்தக் கூடியது.அ.தி.மு.க தலைமையிலான N.D.A கூட்டணியே இந்த தேர்தலில் வெல்லும் என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட ஸ்டாலின் வந்து விட்டார். 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க கூட்டணி வெல்லும் என சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அ.தி.மு.க வெற்றி பெற்றால் பா.ஜ.க முதல்வர் உள்ளே வந்து விடுவார் என அரவிந்த் கெஜ்ரிவாலை விட்டு பேச வைப்பது ஏன்? எல்லாம் தோல்வி பயம்தான்.தி.மு.க இந்த தேர்தலில் நிச்சயம் தோற்று விடும் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
அதி.மு.க கூட்டணி வென்றால் பா.ஜ.க முதல்வர் உள்ளே வந்து விடுவார். இந்த பொய்ய முதல்ல தி.மு.க சார்பா ஸ்டாலின் சொல்வார், அப்புறம் அதே பொய்ய கைப்புள்ள திருமாவை விட்டு சொல்ல வைப்பார். மக்கள் இன்னும் அந்த பொய்ய முழுசா நம்பலையா? கூப்பிடு வெளியூர் கைப்புள்ள அந்த அரவிந்த கெஜ்ரிவாலை! இதன் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தி.மு.க கற்றுக் கொடுக்கும் பாடம் என்னவென்றால் ஒரு பொய்ய மக்களை முழுசா நம்ப வைக்க அந்தப் பொய்ய நாம சொன்னா மட்டும் பத்தாது. நாலு பேர நம்ம சார்பா கூப்பிட்டு அவங்களையும் அதே பொய்யை சொல்ல வக்கணும். அப்பதான் மக்கள் அத முழுசா நம்புவாங்க.எப்புடி? இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ராஜதந்திரம்?
முதல்ல இவருஅகிட்ட இருந்து மகசேசே விருத பிடுங்கனும்.....

We are happy to welcome BJP than any of you