போலீஸ் பாதுகாப்பு 'சூப்பர்'; செங்கோட்டையன் சான்று
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செங்கோட்டையன் அளித்த பேட்டி:
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பிரசாரம் மேற்கொண்டார். அவரது நிகழ்ச்சிகளுக்கு போலீசார் உரிய முறையில் பாதுகாப்பு அளித்தனர்.
அதேபோல், வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் அனைவருக்கும் த.வெ.க., சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆகையால், அது குறித்து கருத்து கூற முடியாது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்