மூன்று தொகுதிகளிலும் சிக்கல்; தேறுவாரா அமைச்சர் மகேஷ்?
அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுவதால், அவற்றில் தி.மு.க.,வின் வெற்றி சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக, அமைச்சர் மகேஷ் உள்ளார். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன.
* திருச்சி கிழக்கில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்தான், த.வெ.க., தலைவர் விஜயும் போட்டியிடுவதால், தி.மு.க., வெற்றி பெற கடுமையாக போராடும் சூழல் உள்ளது
* அமைச்சர் மகேஷ் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர். இங்கு, த.வெ.க., சார்பில், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் நவல்பட்டு விஜி, அ.தி.மு.க., சார்பில், மா.செ., குமார் போட்டியிடுகின்றனர். நவல்பட்டு விஜி தான் வேட்பாளர் என அறிவிக்கும் முன்பு வரை, மகேஷ் வெற்றி உறுதி என்ற தோற்றம் நிலவியது. இப்போது விஜி போட்டியிடுவதால் அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது
* மணப்பாறையில், சிட்டிங் எம்.எல்.ஏ., அப்துல் சமது போட்டியிடுகிறார். இவரது மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. நான்காவது முறையாக இத்தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி விட்டதால் உள்ளூர் தி.மு.க.,வினர் கடும் சோர்வில் உள்ளனர், அப்துல் சமதுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம். மேலும், இத்தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் விஜயகுமார், த.வெ.க., சார்பில் கதிரவன் போட்டியிடுவதால், களம் மேலும் நெருக்கடி ஆகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலால், அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொகுதிகளையும் தி.மு.க., மீண்டும் கைப்பற்றுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Anbil mahesh grand father anbil Dharma lingam, his father anbil poyamolizhi, they are three generations earned very good money and so much of property in anbil, lalgudi, and Trichy areas, what to do what ever he and his family earned money his co minister k.n.nehru was earned More than twenty times compared with anbil mahesh, hence every one has earned money in DMK government and ministry people should not worry about their defit
அன்பிலுக்கு இருக்கு உதயநிதி இன்பநிதி பேரவை தலைவர் பதவி. அது போதும்.
பல தலைமுறைகளுக்கு சொத்து சம்பத்துக்கள் சேர்த்துவிட்ட இவர்களுக்கு, தான் தோற்பதில் எந்தவொரு வருத்தமும் இருக்கப்போவதில்லை. மாறாக, நாம்தான், இவர்கள் தோல்வியைக் கண்டு சற்றே ஆறுதல் அடைவோம். தவிர அவர்கள் அனைவரும் குபேரர்களுக்கே அதிபதியாகிவிட்டனர் என்பதை, நினைவிற்கொள்க அன்பர்களே
மூன்றெழுத்து கட்சி அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தேர்தல் வரும் வரையில் அவரது கட்டுப்பாட்டு மூச்சு இருக்கும் ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரது கட்டுப்பாட்டை இழந்துவிடும்

இவரெல்லாம் வெற்றிபெறவேண்டும் என்ன யாரும் கவலைப்படுவது இல்லை. இதுதான் உண்மை.