பாமக வேட்பாளர்களை எதிர்த்து ராமதாஸ் பிரசாரம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 20ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீ காந்தி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செஞ்சி தொகுதிகளில் வரும் 20ம் தேதி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி இருவரும் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தொகுதிகளில், ராமதாஸ் ஆதரவு பெற்ற அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.
இந்த 2 தொகுதிகளிலும், பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு, பாமகவின் அங்கீகாரம் பெற்ற மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் எதிர்த்து தான் ராமதாசும் அவரது மகள் ஸ்ரீ காந்தியும் பிரசாரம் செய்கின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்