பாமக வேட்பாளர்களை எதிர்த்து ராமதாஸ் பிரசாரம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 20ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீ காந்தி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செஞ்சி தொகுதிகளில் வரும் 20ம் தேதி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி இருவரும் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தொகுதிகளில், ராமதாஸ் ஆதரவு பெற்ற அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.
இந்த 2 தொகுதிகளிலும், பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு, பாமகவின் அங்கீகாரம் பெற்ற மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் எதிர்த்து தான் ராமதாசும் அவரது மகள் ஸ்ரீ காந்தியும் பிரசாரம் செய்கின்றனர்.
Advertisement
வயது முதிர்ந்த காலத்திலேயே இதெல்லாம் தேவையா? தனது முகத்தில் தானே கறியை பூசி கொள்ள அவரே தயாராக இருக்கும் போது நாம் என்ன சொல்வது. சொன்னாதான் கேட்பாரா. வீம்புக்குனா ....
அன்புமணி வேட்பாளர்களை எதிர்த்து என்னவென்று பிரசாரம் செய்வாராம். அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்றால் பா.ம.க. தோன்றியது முதல் அவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கிய நீங்கள் எப்படிப்பட்டவர் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்களா.

மகா கேவலமான ஜென்மம்.