Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்: கலெக்டர்கள், கமிஷனர்களும் மாற்றம்

டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்: கலெக்டர்கள், கமிஷனர்களும் மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் இன்று இரவு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் உள்ளார். இந்நிலையில், அவரை மாற்றி புதிய டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இவர் இன்று இரவு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

யார் இவர்

சந்தீப் ராய் ரத்தோர் டில்லியில் பிறந்தவர். 1992ம் ஆண்டு தமிழக கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திண்டுக்கல் எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார்.

1992ம் ஆண்டு கோவை துணை கமிஷனராக பணியாற்றினார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்தார்.

சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த போது, 2000 ம் ஆண்டு சிக்னல்களில் எல்இடி விளக்குகளை பராமரிக்கும் விதிகள் கொண்டு வரப்பட்டன.2003 ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பி ஆக பதவி வகித்த போது தமிழகத்தை அதிரவைத்த முத்திரைத்தாள் மோசடி வழக்கை கையாண்டதில் முக்கியமான அதிகாரி ஆவார்.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஜஜியாக 2010 ல் பதவி உயர்வு பெற்றார். 2016ம் ஆண்டு கடலோர பாதுகாப்பு குழு ஐஜி ஆக இருந்தார். 2019 ம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணய தலைவராக இருந்தார். இதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் ஆகவும் இருந்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டார்.ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி உள்ளார்.

கமிஷனர்கள் இடமாற்றம்

மேற்கு மண்டல ஐஜி ஆக ரம்யா பாரதி நியமனம்
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய கமிஷனர் ஆக சஞ்சய் குமார் பதவியேற்க உள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர் ஆக இருக்கும் லோகநாதன் மாற்றப்பட்டு உள்ளார். அபிஷேக் தீக்சித் புது கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள் மாற்றம்

தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் மாற்றப்பட்டார். விசு மகாஜன், புது கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் கலெக்டராக இருந்த பிருந்தா தேவி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் நாளை ஏப்ரல் 3ம் தேதி காலை பதவியேற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

ஏப் 03, 2026 02:42 am

திமுக போன்ற கட்சிகளை அடக்க கூடிய நல்ல அதிகாரிகள் வேண்டும்.தேர்தல் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்க தமிழக அதிகாரிகள் தேவை இல்லை

Reply Rate this
ஏப் 03, 2026 02:04 am

Police DGP 12am க்கு வேலை செய்வாங்களா

Reply Rate this
ஏப் 02, 2026 11:54 pm

தேர்தல் மூன்று மாதங்கள் முன் கவர்னர் ஆட்சி மட்டுமே நடைபெற வேண்டும். அப்போது தான் அதிகாரிகள் மாற்றங்கள் பாரபட்சம் இன்றி இருக்கும்

Reply Rate this
ஏப் 02, 2026 11:53 pm

தேர்தல் நேரத்தில் வேறு மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் இங்கு வர வேண்டும். இங்கு பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் நடை பெறாத மாநிலங்கள் அனுப்ப பட வேண்டும்.

Reply Rate this
ஏப் 02, 2026 11:08 pm

மதுரை கலெக்டர மாற்றவில்லை.....தடை உத்தரவு போட்டு அன்பை கான்பித்தவர்..

Reply Rate this
ஏப் 02, 2026 10:13 pm

இடம் மாற்றலாம், சும்மா இருக்க மாட்டாங்க. அப்படியே பழகியாச்சு... அதிகாரிகள் என்பது மறந்தே போச்சு...

Reply Rate this
ஏப் 02, 2026 09:33 pm

இந்த செயல் மிகவும் தாமதமாக செய்யப்பட்டுள்ளது இருந்தாலும் பரவாயில்லை இப்போதாவது
செய்தார்கள் நன்றி தமிழ் நாடு போலீசு துறை முழுவதும் திராவிட மாடல் அரசின் கைப்பிள்ளை
அதை அறவே ஒழிக்க வேண்டும் இரண்டாவது சென்னை நகர் கமிஷின்ர் திருச்சி நகர கமிசினெர் இவர்களையும் உடனே மாற்ற வேண்டும் இதுபோன்று மாட்ட அதிகாரிகளையும் கலெக்டர்களையும்
மாற்ற வேண்டும் இவர்களெல்லாருமே திராவிட மாடல் அரசின் செல்ல பிள்ளைகள்

Reply Rate this
சரியாக சொன்னீர்கள்
ஏப் 03, 2026 02:44 am
Rate this
ஏப் 02, 2026 08:50 pm

மாநில போலீஸ் துறை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கவர்னர் கட்டுப்பாட்டில் வந்தால் மட்டுமே லோக்கல் அரசியல் வாதிகளின் அடிமையாக அடியாள் ஆக செயல்படுவதை போலீஸார் கைவிடுவார்கள்.. மொத்த காவலர்களில் ஐம்பது சதவீதம் பிற மாநிலத்தவர் பிற மொழிக்காரர்களாக இருப்பது நல்லது... ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சரிபாதி போலீஸார் வேறுமாநிலத்தவராகவும் மற்றவர்கள் பிற மாவட்டத்தினராகவும் இருக்க வேண்டும்.. சொந்த ஊர்/ சொந்த மாவட்ட போஸ்டிங் சாதி சங்கம் அரசியல் கட்சி ஈடுபாட்டை வளர்க்கும்...குவார்ட்டர்ஸ் வசதி பெறும் போலீசாருக்கு சொந்த ஊர் போஸ்டிங் எதற்கு?..

Reply Rate this
ஏப் 02, 2026 08:41 pm

தேர்தல் ஆணைய போலீசா? திமுக போலீஸ் இல்லை என்றால் மொத்த ரவுடிகளும் ஓட்டு போட முடியாது. இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர் கள்ள ஓட்டு போட வரமாட்டார்கள். சிறுபான்மை வாக்கு சிதறி விட்டது. கள்ள ஓட்டு கழகம் கலகத்தில் இருக்கும்.

Reply Rate this
ஏப் 02, 2026 08:40 pm

ஆஹா... நம்ம மாடல் ஆட்கள் போட்டு வைத்த திட்டம் எல்லாம் பணால் ஆகி விடும் போல் தெரிகிறதே..... தேர்தல் வரை டிஜிபி நியமிக்காமல்.... நமக்கு விசுவாசமான ஆளை வைத்து... தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்ற மாடல் ஆட்கள் கனவில் தேர்தல் ஆணையம் மண்ணை அள்ளி போட்டு விட்டது.... அதனால் தான் தேர்தல் ஆணையத்தை விடியல் எதிர்க்கிறார் போல் தெரிகிறது.

Reply Rate this
அப்படி இல்லை ..மேல் மட்டத்தில் மாறுதல் செய்தாலும் பூத்லெவெலில் அதே போலீஸ், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இருப்பர்.. மோசடி வேலைகள் அமோகமாக தொடரும்..
ஏப் 02, 2026 09:36 pm
Rate this