தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக ஆயர் பேரவைக்கு, தலித் கிறிஸ்தவ ஆசிரியர், அலுவலர் நலச்சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு என்ற, தமிழக ஆயர் பேரவையின் முடிவு கண்டனத்திற்குரியது. இந்த முடிவை, தலித் கிறிஸ்தவர்களால் ஏற்க முடியாது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, மதத்தின் பெயரால் மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் சலுகைகளும் கிடைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்' என கூறப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில், இதுபோன்ற வாக்குறுதிகள் தரப்படவில்லை.
இந்திய பட்டியலினத்தவருக்கு ஒரு பிரச்னை என்றால், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. ஆனால், பட்டியலின கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர்களை கிறிஸ்தவராக பார்க்காமல் தலித்தாக பார்த்து, திருச்சபை நிர்வாகம் பாராமுகமாக இருக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்று ஆயர் பேரவை கருதினால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்க்கலாம். மற்ற தொகுதிகளில் சுதந்திரத்தோடு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது தான், நியாயமாக இருக்கும். இதை சொல்ல தடையாக இருப்பது எது என்பதை, ஆயர் பேரவை தெரிவிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின், எந்த சூழ்நிலையிலும் த.வெ.க., தலைவர் விஜயை ஆதரிக்க மாட்டோம் என, ஆயர் பேரவையால் உறுதியாக கூற முடியுமா?
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினரான பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.,வை ஆதரிக்கும் முடிவை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
ஒண்ணு தலித்தா இரு இல்லையா கிறிஸ்துவனா இரு அது ஏன்னா தலித் கிறிஸ்துவன் ? இதுக்கு ஒரு சட்டம் வரணும்
சாதி கிடையாது என்று தானே அங்கே போனீர்கள். அப்பறம் எப்படி அங்கே சாதி வந்தது. அங்கே உள்ளே சாதி பிரிவினை, அடிதடி எல்லாருக்கும் தெரியும்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி? உண்மையான தலித்துகளின் உரிமைகளை நீங்கள் எப்படி பறிக்கலாம்?
கிறிஸ்தவ வேதப்படி வாழ்வில் படி சாதி என்ற ஒன்று கிடையவே கிடையாது.. கிறிஸ்தவத்தில் சாதி என்பதே பெரிய மோசடி... தலித் சலுகைகள் வேண்டும் என்றால் நீங்கள் ஏன் திரும்ப ஹிந்து தர்மத்தை ஏற்கக்கூடாது?..உழைப்பு நிதி மற்றும் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது ஆயர் & பாதிரி கும்பலே.. இந்த கும்பலை ஒழித்து கட்டாத வரை கிறிஸ்தவ மக்களுக்கு ஆன்மீக விடுதலை கிடைக்கவே கிடைக்காது..
கிருஸ்துவ வன்னியச்சி , தலித் கிறிஸ்த்துவச்சி என்று எதுவும் இல்லை இதனை கோர்ட் கூட சொல்லிவிட்டது , ஆனா நான் இன்னமும் வன்னியர் பரம்பரை என்று சொல்லிக்கொள்கிறேன்
தலித்துக்கள் என்றாலே ஹிந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் மட்டுமே கிறிஸ்துவம் இல்லை. எனவே இவர்கள் தலித் என்னும் பதத்தை உபயோகிப்பது உச்ச நீதி மன்ற சமீபத்திய தீர்ப்புக்கு எதிரானது.
ஆயர் பேரவையின் முடிவுக்கு இனிப்பு பெட்டிகள் தான் காரணம். . இனிப்பை பிடிக்காதவர்கள் வெகு குறைவு.

தலித் பௌத்தர் என்பதே அம்பேத்கருக்காக அவரே வகுத்துக் கொண்டதுதான்.