தமிழக உள்துறை செயலராக பதவியேற்றார் மணிவாசன்
சென்னை: தமிழக உள்துறை செயலராக நியமிக்கப்பட்ட மணிவாசன் இன்று மாலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.
அந்தவகையில் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. புதிய செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 11) மாலை உள்துறை செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
ஏற்கனவே தலைமைச் செயலர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசீர்வாதம், தமிழக டிஜிபி மாற்றப்பட்டுள்ளனர்.
Advertisement
நல்ல நடவடிக்கை அருணை மாற்றியதில் மக்கள்,அனைவர்க்கும் சந்தோசம் அவர் முதல்வரின் கைப்பிள்ளை கோபால புறத்திலிருந்து முதல்வர் கைகளை ஆட்டினால் அருண் அதை அப்படியே கண்களைமூடிக்கொண்டுசெய்துவிடுவார்
தங்களுக்கு அனுசரணையான அதிகாரிகளைத்தான் பதவியில் வைத்திருந்தார்கள். மாற்றியவுடன் பலர் கூக்குரலிடுவதில் இருந்து அவர்களின் கள்ளத்தனம் செய்ய இருந்த திட்டம் பணலாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
தமிழகத்தில் பெரும்பாலும் அதிகாரிகள் ஆளும் கட்சியில் சேராமல் சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். உள்துறை செயலர் கட்டுபாட்டில் போலீஸ் இருக்காது. ?உள்ளூர் அரசியல் வாதிகள் கட்டுபாட்டில் இருக்கும். பல லாக்கப் மரணம். கொலை கொள்ளை. உள்துறை செயலர் தான் கட்டுக்குள் வைக்க வேண்டும். மக்களை ஏமாற்றி வந்தவருக்கு இடமாற்றம்? மோசமான நிர்வாகத்திற்கு காரணம் வழக்கில் ஒரு வழி விசாரணை அதன் மூலம் தீர்வு. தேர்தல் ஆணையம் போல் தலைமை செயலர் செயல்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் வரம்பு மீறிய செயல், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும், நீதி மன்றத்தில் நிற்கும்போது தெரியும். தேர்தல் ஆணையத்தை பேரை எப்படி எல்லாம் கெடுத்து விடீர்கள் என்று.