காங்., உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை : உதயநிதி
சென்னை: 'பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக தி.மு.க., இளைஞரணி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது :
20 ஆண்டுகள் நம் தோள் மீது சவாரி செய்த காங்கிரஸ் நம் முதுகில் குத்தி விட்டு, பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டது. இனி எந்த காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க., உழைப்பு தான் காரணம். தமிழக மக்கள் காங்கிரசுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள் உங்க தாத்தா நம்ம அப்படித்தான் சொன்னார் உங்க அப்பனும் அப்படி தான் சொன்னார் நீயும் அப்படித்தான் சொல்கிறாய்
D M K, kku tamilnadu il, 15% vote than irukkum. ippthe approx ah 25 candidate s other party' candidates than .so D M K future...?????????
திமுக வை பொறுத்த வரை பாஜக இயல்பான கூட்டணி இல்லை. மூன்றாவது அணி தான் திமுக முன் உள்ள சாய்ஸ். இப்பொழுதே ஸ்டாலின் அவர்கள் பிரதம வேட்பாளரை முடிவு செய்தால் தான் அவர் முடிவு செய்பவர்
வருங்கால பிரதமராக வருவார்.
இந்த உதயநிதியோட தாத்தன் முத்துவேல் கருணாநிதி இவர போலவே காங்கிரசுடன் இனி எந்தக் காலத்திலும் ஒட்டோ உறவோ இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அதே காங்கிரஸுடன் கருணாநிதி பல தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட வரலாறு உண்டு. இப்போது சரித்திரம் திரும்புகிறது. அதே குடும்ப டயலாக் அதே குடும்ப அரசியல் அப்போது தாத்தா இப்போது பேரன் நாளை இவனது மகன் இன்பநிதி தொட்டுத் தொடரும் கொடுமையான குடும்ப பாரம்பரியம்!

Mr.Udayanidhi, is just like a child born over night, in the political field. it will take several years, before he becomes a matured politician, as he is totally irresponsible.