ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
நமது நிருபர்
திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். ஓட்டுச் சாவடிக்குள் வீடியோ எடுத்தால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் கமிஷன் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்த வீடியோவை வெளியிட்ட தவெக ஆதரவாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பலர் தாங்கள் ஓட்டு போட்ட வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
அந்த விசை வாங்குன பாரின் காருக்கு கட்டவேண்டிய வரியை முதலில் கட்டச்சொல்லுங்க
இப்படிப்பட்ட தற்குறிகளின் ஓட்டுரிமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும்.
எப்போது ஜாக்ட்டோ ஐய்யோ என்ற திமுக அணியின் கையில் தேர்தல் கமிஷனை ஒப்படைத்தீர்களோ இதைவிட அதிகம் எதிர்ப்பார்க்கலாம்
தேர்தல் ஆணையத்தின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது எந்தவொரு சோதனையும் வாக்குச் சாவடியில் கிடையாது பொதுவாக தேர்தல் ஆணையம் பல் இல்லாத ஆணையம் என்று மக்கள் கூறுவது உண்டு இதில் ஆச்சர்யமே எதுவும் இல்லை தருதலைகள் வெத்துவேட்டுக் கழகத்தின் கூமுட்டைகள் கூட்டம் தன் தலைவனைப் போலவே உள்ளது இதுல நாட்டை திருத்த போறானாம்
அந்த நடிகரும் அரசியல்வாதியுமானவரிடம் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த நுண்ணிய அல்லது பரந்த தரவுகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பிரச்சினையும் அவருக்குத் தெரியாது. முறையான பகுப்பாய்வோ அல்லது அதற்கான தீர்வோ இல்லாமல் அவர் வெறுமனே காற்றில் பேசுகிறார். அதன் செலவினங்களை அறியாமலும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ஏதோ ஒரு தேர்தல் அறிக்கையை வெறுமனே வெளியிடுகிறார்.
நமது வெறித்தனமான ஆதரவாளர்கள் அதை வெறுமனே ஆரவாரம் செய்கிறார்கள். நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Severe punishment as per various laws and he should be barred from coning any election in Tamilnadu.
மொதல்ல ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துங்க அப்புறம் வீடியோ போடுறவன பிடிக்கலாம்

ஓட்டுக்காக பட்டியில் அடைத்து மக்களை மாக்களாக நடத்துபவர்கள் கூட தப்பித்து விடுவார்கள்... ஆனால் படம் எடுத்த ஆசாமி கைது... சூப்பர்.