சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி
விழுப்புரம்: 'தமிழகத்தை புறக்கணிக்கும் டில்லி அணியை, தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் வெல்வது டில்லி அணியா, தமிழக அணியா என்பதை முடிவு செய்து, டில்லி அணியை வீழ்த்துங்கள். தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை. தேர்தலின்போது மட்டும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. தமிழகத்தை எல்லா விதங்களிலும் தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ., சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்