Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.9.47 கோடி நகைகள் சிக்கின

 ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.9.47 கோடி நகைகள் சிக்கின

ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடி அருகே, உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட, 9.47 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் செக்போஸ்டில், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை மாவட்டம், ஹார்விபட்டியைச் சேர்ந்த ராஜா, 36, என்பவரின் காரை பரிசோதித்தனர்.

நகைக் கடைகளுக்கு மொத்தமாக நகைகள் விற்பனை செய்யும் முகவரான அவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த, 9 கோடியே 47 லட்சத்து 22,868 ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் கொண்ட எட்டு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். பின், அந்த நகைகள், முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement