திருப்புகழ் பாடிய வேலுார் இப்ராஹிம்
தி ருச்செந்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
ஆத்துார் பகுதியில் அவர் திறந்தவேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பா.ஜ., தொண்டர் ஒருவர் அவருக்கு வேல் பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட வேலுார் இப்ராஹிம், திறந்தவேனில் நின்று கையில் வேல் ஏந்தியபடி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில், முதல் பாடலான, 'முத்தைத்தரு பத்தித் திருநகை' என்ற பாடலை முழுமையாக பாடி அசத்தினார்.
தொடர்ந்து, பேசிய அவர், 'தேர்தல் பிரமாண பத்திரத்தில் படிப்பை முறையாக காட்டாத நபர் தான், இங்கு தி.மு.க., வேட்பாளர். அதை அறிந்து அனைவரும் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள்' என கேட்டுக் கொண்டார்.
Advertisement
இதுதான் உண்மையான மதசார்பற்ற நிலை. மற்ற அரசியல் காட்சிகள் சொல்வது வெறும் வெளி வேஷம். உண்மையில் மத சார்பற்ற கொள்கை என்றால் அனைத்து மத விழாக்களிலும் கலந்துகொண்டு வாழ்த்தும் சொல்லவேண்டும்
அவர் பிரசாரம் எல்லாம் நமக்கு சரிதாங்க. அவர் சார்ந்த சமுதாய மக்களால் அவருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,?
இவர் ஒருவரே உண்மையை உரக்க சொன்னார். இந்தியாவின் இன்றைய முஸ்லீம்கள், மதம் மாற்றப்பட்ட முன்னாள் ஹிந்துக்கள் என்று.
வேலூர் இப்ராஹிம் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களுக்கெல்லாம் முருகனின் வேலை எடுத்துச்செல்லட்டும் அது அவருக்கும் பாதுகாப்பு அவர் பிரசாரத்தை கேட்டு மக்களும் அந்த அந்த இடத்தில் நிற்கும் வேட்பாளருக்கும் வாக்கும் அளிப்பார்கள்
திருப்புகழைப்பாடப்பாட வாய் மணக்கும் என்பதை அறிந்திருக்கிறார். சிறப்பு..

நல்ல உச்சரிப்பு. பாராட்டுக்கள். தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் திராவிட கும்பலுக்கு தமிழ் உச்சரிப்போ, ஒழுங்காக தமிழை பேச, வாசிக்க தெரியாத நிலையில், ஒரு இஸ்லாமியர் அழகான உச்சரிப்புடன் திருப்புகழ் பாடுவது அழகு. நல்ல வீடியோ தினமலரில்.