கிறிஸ்துவர்கள் ஓட்டு யாருக்கு? தி.மு.க., - த.வெ.க., 'திக்... திக்...'
- நமது நிருபர் -
கிறிஸ்துவ மக்களின் ஓட்டுகளை பெற, தி.மு.க., - த.வெ.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் ஓட்டுகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளில், 8 சதவீதம் அளவிற்கு கிறிஸ்துவ ஓட்டுகள் உள்ளன. கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்துவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு கிடைத்து வந்தன; அக்கட்சியின் தொடர் வெற்றிக்கு கைகொடுத்தன.
அவர் மறைவுக்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் அடங்கிய சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க., பக்கம் திரும்பின. இதனால், தி.மு.க., தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.
சட்டசபை தேர்தலில், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகர் ஜோசப் விஜய், தன் த.வெ.க., சார்பில் 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். சிறுபான்மையினர் ஓட்டுகளை குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறார்; குறிப்பாக, கிறிஸ்துவ மக்களின் ஓட்டுகளை முழுமையாக பெற வியூகம் அமைத்து வருகிறார்.
கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். இதற்கிடையே, முஸ்லிம் வேட்பாளர்களை அதிகம் நிறுத்தி, அவர்களின் ஓட்டுகளை தி.மு.க., தக்க வைத்துக்கொண்டது.
அதே நேரத்தில், தி.மு.க.,விடம் இருந்து கிறிஸ்துவ ஓட்டுகள் கைநழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், வேட்பாளர்கள், பல்வேறு சர்ச்சுகளின் பாதிரியார்களை நேரில் சந்தித்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.
பாதிரியார்கள் பலரும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், சர்ச்சுகளுக்கு வரும் பெண்களும், இளைய தலைமுறையினரும், விஜய்க்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களை கவரும் வகையில், சர்ச்சில் முழங்காலிட்டு விஜய் வேண்டுதல் செய்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. அதே நாளில் பாதிரியார்களை முதல்வர் சந்தித்து பேசிய பரபரப்பு, விஜய் செயலால் அடங்கிப்போனது.
எனவே, கிறிஸ்துவ சமுதாய மக்களின் ஓட்டுகள் யாருக்கு கிடைக்கும்; 'இயேசுவின் ரத்தம் ஜெயம்' யாருக்கு என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி உள்ளது.
Advertisement
கிறிஸ்தவர்கள் தவெகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று பாதிரியார்கள் திருச்சபைகளில் அறிவுறுத்தி உள்ளனர். எனவே கிறிஸ்தவ மக்கள் த வெ க வுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.
இயேசுவின் ரத்தம் விஜய்க்கு ஜெயம், திமுகவுக்கு சாபம், கிறிஸ்தவ கும்பலுக்கு நீண்ட நாள் கனவு இது.
Only due to saffron forces, the nefarious designs of the church and jamath have come to light.
Newspapers are unnecessarily making unwarranted news on who is going to whom. Individuals to decide and application of their mind. Only after saffron brigade regime this sort foolish news spread among citizens. Southern States citizens are progressive mindset people not like hindi heartland cooked mindset people.
முஸ்லிம்கள் என்னவோ முஸ்லிம்களாகவே வாக்களிக்கின்றனர். ராவுத்தர் மரைக்காயரா லெப்பையா என சிந்திப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் கிறித்தவ வேட்பாளரின் சாதியை கேட்டே வாக்களிக்கின்றனர். கத்தலிக்குகளை மற்றவர்கள் கிறிஸ்தவராக ஏற்பது அபூர்வம். ஜோசப் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார்.
இயேசுவின் போதனைகளை கேட்டு அதன்படி நடக்காதவர்கள் பாதிரிகளின் பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டுப் போடுவர்? எந்தப் படத்திலாவது விஜய் ஒரு கன்னத்தில் பளார் விட்டவனுக்கு மறு கன்னத்தைக் காட்டியுள்ளாரா?
ஒரு கிறிஸ்தவர் முதல்வராக ஆக அந்த சமுதாயம் பல காலம் ஏங்கியது. கிரிப்டோ கிறிஸ்தவர்களை சேர்த்து 10% இருக்கும் அவர்கள் ஓட்டு பெரும்பாலும் ஜோசப்புக்கே கிடைக்கும். இது போக விஜய் ரசிகர்கள். ஆக, 20% ஓட்டுக்கள் பெறும் தவெக ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது. தவெக புண்ணியத்துல எடப்பாடி முதல்வராக வருவார்.
பெரும்பான்மையான இந்துக்கள் அ தி மு க கூட்டணியை ஆதரித்து வாக்களிப்பர்.... காரணம் திருப்பரங்குன்றம் விவகாரம், ஜோசப் விஜய் தான் ஒரு அக்மார்க் இந்து விரோதி என்பதை கடந்த இந்துக்கள் பண்டிகைகளை வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து, பெரியாரின் கொள்கைகளை தூக்கி பிடிக்கும் கொள்கை, தி மு கவை போன்றே இந்து விரோதி என்பதை புரிந்து கொண்டு இது போன்ற கும்பல் ஆட்சி க்கு வந்தால் போதை பொருள் கடத்தல், பாலியல் பலாத்காரம், குடும்ப ஆட்சி கொடூரம் இவையெல்லாம் பார்த்தால் NDA வால் தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி, பின்னோக்கி செல்லும் தமிழகத்தினை அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் கண்ணியமான ஆட்சி ,பெண்ணியம் காட்கும் அரசாங்கம் அமையும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு, மத மாற்றிக் கும்பல், இந்து விரோதி, சினிமா மோகம் வேறு, நிர்வாகம் வேறு என்பது பகுத்தறிந்து நமது வாக்குகளை செலுத்திடவேண்டும். கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விடாதீர்.... இவர்கள் கொடுக்கும் 1000 ரூபாய் 5 ஆண்டுகளுக்கு பார்த்தால் தினமும் .50 பைசா கூட இல்லை. சிந்தித்து ஒட்டு போடுங்கள் சொந்தங்களே.

இந்துக்களே திருந்துங்கள் - எவனுக்கும் உங்க வோட்டு வேண்டாம்